என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkata knight riders"

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • KKR உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து பாரத் அருணை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

    இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.

    மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

    ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.

    • அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது. 

    • ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • அடுத்த சுற்று வாய்ப்பை இந்த 2 அணிகளும் இழந்துவிட்டன

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட இந்த 2 அணிகளும் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
    • நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி முந்தைய இரு ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட அந்த அணி வெற்றியுடன் விடைபெற ஆர்வம் காட்டும். ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் யார்? கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    • ஆர்சிபி- கொல்கத்தா போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • இந்த போட்டியில் மழை வந்தாலும், கொல்கத்தா தோல்வி அடைந்தாலும் தொடரில் இருந்து வெளியேறி விடும்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று முதல் தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.

    இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவு கலைந்துவிடும். அப்படி ஒரு புள்ளி எடுக்கப்பட்டால் நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட ஆர்சிபி முன்னேறிவிடும்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் கடந்த 8-ந்தேதி இரவு நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டம் (58-வது லீக் ஆட்டம்) பாதியில் கைவிடப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அடுத்த நாளில் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமை உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. முதலாவது தகுதி சுற்று 29-ந்தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந்தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந்தேதியும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் ரஜத் படிதார் முழு உடல் தகுதியை எட்டி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இரண்டு ஆட்டங்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அதே சமயம் போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அவ்வப்போது கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்திஷ் ராணா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி (இங்கிலாந்து) விலகி இருப்பது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. இதேபோல் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு தகர்ந்து விடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் அல்லது மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி அல்லது மனிஷ் பாண்டே ,ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்டியா அல்லது ஸ்பென்சர் ஜான்சன்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின.
    • 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

    இப்போட்டி கடைசி பந்து வரை மிக சுவாரசியமாக சென்றதால் இந்த சீசனின் சிறந்த போட்டி இது தான் என்று நெட்டிசன்கள் இணையத்தில் மீம்களை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இதுதாண்டா சினிமா (ABSOLUTE CINEMA) என்ற பிரபல மீமை ரகானே புகைப்படத்துடன் கொல்கத்தா அணி பகிர்ந்துள்ளது. இந்த மீம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது
    • 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

     இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது.

    கடைசி வரை மூச்சைப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்த ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவியது.

    • ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    கொல்கத்தாவின் தொடக்க வீரராக சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். ,மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து இறங்கிய ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். பின் ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர்கள் விளாசிய ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில்  கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது. எனவே 207 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    • 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மதியம் தொடங்கியது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச உள்ளது.

    இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.  

    ×