என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkata knight riders"

    • குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • கொல்கத்தா அணியில் ரஹானே 50 ரன்களில் வெளியேறினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும்,  சிங் 1 ரன்களும் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    • சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தியுள்ளார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது.

    • குஜராத் தரப்பில் சுதர்சன், சுப்மன் கில் அரை சதம் விளாசினர்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 114 ரன்கள் எடுத்தது. 52 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்த கில்லுடன் பட்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திவாட்டியா 0 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 41 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    அதேவேளையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    • பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரு தோல்வி கூட (பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) நெருங்கி வந்து தான் தோற்றது.

    பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. சாய் சுதர்சன் (4 அரைசதத்துடன் 365 ரன்), ஜோஸ் பட்லர் (3 அரைசதத்துடன் 315 ரன்), கேப்டன் சுப்மன் கில் (215 ரன்), ரூதர்போர்டு (201 ரன்) ஆகிய 4 பேரும் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள். பெரும்பாலும் இவர்களில் யாராவது ஒருவர் கைகொடுத்து விடுகிறார்கள். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (14 விக்கெட்), சாய் கிஷோர் (11 விக்கெட்), முகமது சிராஜ் (11 விக்கெட்) கலக்குகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 204 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லியை பதம் பார்த்த குஜராத் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் உள்ளது.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு சீராக இல்லை. ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் உடனே தோற்று விடுகிறார்கள். இதுவரை அப்படி தான் நடந்துள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் வெறும் 95 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது. பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (7 ஆட்டத்தில் 34 ரன்), ரமன்தீப்சிங் (29 ரன்) முக்கியமான தருணங்களில் சோபிக்காதது பலவீனமாக உள்ளது. கேப்டன் ரஹானே (221 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் 200 ரன்களை தாண்டவில்லை. பேட்டிங், பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒருங்கிணைந்து முழு திறமையை காட்டினால் மட்டுமே குஜராத்தின் சவாலை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

    • இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.
    • அவருடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை பிசிசிஐ முறித்துள்ளது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.

    இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.

    பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் ஆகியோரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.

    இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபிஷேக் நாயர் இணைந்துள்ளார். கே.கே.ஆர். ஜெர்சியில் இருக்கும் அபிஷேக் நாயரின் புகைப்படத்தை கே.கே.ஆர். அணி பகிர்ந்துள்ளது.

    இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கே.கே.ஆர். அணியை விட்டு வெளியேறிய அபிஷேக் நாயர் மீண்டும் கே.கே.ஆர். அணியின் இணைந்துள்ளார்.

    • ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம்.
    • தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

    இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

    ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.

    பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர்.

    இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேசிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    என்று ரகானே கூறினார்.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
    • இந்த போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.

     

    இதற்கு முன்பு சென்னை அணி 2009-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்னை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும். அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் முறியடித்தது.

    • கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக சுனில் நரைன் விளையாடி வந்தார்.
    • நரைனிடம் இருந்த பேட்டிங் திறமையை கொல்கத்தா அணி கண்டுபிடித்தது.

    ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பியது.

    இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சீனில் நரேன் அதிரடியாக ரன்களை குவித்து கொல்கத்தா அணியில் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

    பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் அவரது பேட்டிங் அணிக்கு கைகொடுக்கத்தால் அவர் நடுவரிசையிலும் பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டார்.

    அவ்வகையில் ஐபிஎல் தொடரில் சுனில் நரேன், 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் பேட்டிங் செய்துள்ளார்.

    • 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
    • கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

    கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
    • 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 116 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.

    ×