search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata Knight Riders"

    • எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

    பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
    • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

    வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
    • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

    இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    • சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
    • குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் உள்ளர். அதனால் எனது கணிப்பு கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும்.

    இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தா தரப்பில் ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் அரை சதம் அடித்து அசத்தினர்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- நரைன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்தது. 23 ரன்னிலும் நரைன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மேலும் அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    • ஐதராபாத் தரப்பில் ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.

    அதனை தொடர்ந்து அபிஷேக் சர்மா 3, நிதிஷ் ரெட்டி 9, சபாஷ் அகமது 0, என வெளியேறினர். இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக விளையாடிய கிளாசன் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதியுடன் சமாத் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அரை சதம் கடந்தார்.

    மிகவும் நம்பிக்கையுடன் இந்த ஜோடி விளையாடி வந்தது. தேவையில்லாமல் 1 ரன்னுக்கு ஆசைப்பட்ட இந்த ஜோடி ரன் அவுட் ஆனது. இதில் ராகுல் திரிபாதி 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இம்பெக்ட் பிளேயாராக வந்த சன்வீர் சிங் கோல்டன் டக் அவுட்டும் புவனேஸ்வர் குமார் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.

    இதனையடுத்து கேப்டன் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்களாக மாற்றப்பட்டது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெற இருந்த இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. எனினும் மழை காரணமாக இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இடையில் மழை நின்றதால், போட்டி ஏழு ஓவர்கள் நடத்தப்படும் என்று கூறி டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த நிலையில், டாஸ் போடப்பட்டதில் இருந்து மழை மீண்டும் துவங்கியது.

    தொடர்ச்சியாக மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவாலிஃபையர் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்கள் போட்டி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில், இது ஏழு ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

    தோல்வி அடையும் பட்சத்தில் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் ராஜஸ்தான் அணி இருக்கும். அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
    • முதல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி லீக் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னணி இடத்திற்கு முன்னேறும். மாறாக மழை காரணமாக போட்டி நடைபெறாத பட்சத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும். 

    • முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார்?

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

    வாழ்வா-சாவா ஆட்டம்

    'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

    சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    பெங்களூரு அணி எப்படி?

    பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நிலையற்ற சென்னை

    5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

    அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இரவு 7.30 மணிக்கு...

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

    சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×