என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா நைட் ரைடர்ஸ்"

    • கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக அந்த்ரே ரஸல் விளையாடினார்.
    • அந்த்ரே ரஸலை கொல்கத்தா அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

    கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.

    2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

    • சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் நேற்று வெளியிட்டது.

    சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.

    இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஆண்ட்ரே ரசலை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கேகேஆர் இருக்கும்.. எனக்கு தெரிந்து கேமரூன் கிரீன் சிஎஸ்கேவை விட கேகேஆர் அணிக்கு தான் தேவையான வீரராக இருப்பார். அதனால் கிரீனின் விலையை சிஎஸ்கே அணி ஏற்றிவிடவேண்டும், அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழுவீச்சில் செல்லமுடியும்.. சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸால் பவுலிங் மற்றும் சிறந்த ஃபினிசிங் போன்றவற்றிற்கு ரஸ்ஸல் சிறந்த தேர்வாக இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும் வைத்துள்ளன.
    • குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.

    அந்த வகையில் 10 அணிகளும் ரிலீஸ் செய்த வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டி காக், மொயீன் அலி, அன்ரிச் நோர்ஜே, வெங்கடேஷ் அய்யர் (23.75 கோடி ரூபாய்), அந்த்ரே ரஸல் (12 கோடி ரூபாய்) ஆகியோரை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் கொல்கத்தா கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும்.

    மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25.50 கோடி ரூபாயும், குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 21.80 கோடி ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் 11.50 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    • அந்த்ரே ரஸல், வெங்கடேஷ் அய்யரை விடுவித்துள்ளது.
    • கைவசம் 64.3 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 வீரர்களை வெளியிட்டுள்ளது.

    கொல்கத்தா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அந்த்ரே ரஸலை விடுவித்துள்ளது. அதேபோல் அதிக தொகைக்கு வாங்கிய வெங்கடேஷ் அய்யரையும் விடுவித்துள்ளது.

    அத்துடன் லவ்னித் சிசோடியா, டி காக், அன்ரிச் நோர்ட்ஜே, ரஹ்மதுல்லா குர்பாஸ், மொயீன் அலி, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சக்காரியா ஆகியோரை நீக்கியுள்ளது. தற்போது தன்வசம் 64.3 கோடி ரூபாயை வைத்துள்ளது. இந்த தொகையுடன் மினி ஏலத்தில் செல்ல இருக்கிறது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • KKR உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து பாரத் அருணை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
    • தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    அவர் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    • கொல்கத்தா அணியில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
    • சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    தற்போது பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் சமாளித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    • கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • கே.கே.ஆர். அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் நரைன் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.

    கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

    டி20 கிரிக்கெட்டில்ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்

    1. சுனில் நரைன் - 210* (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

    2. சமித் படேல் - 208 (நாட்டிங்ஹாம்ஷையர்)

    3. கிறிஸ் உட் - 199 (ஹாம்ப்ஷயர்)

    4. லசித் மலிங்கா - 196 (மும்பை இந்தியன்ஸ்)

    5. டேவிட் பெய்ன் - 193 (க்ளௌசெஸ்டர்ஷையர்)

    • ஐபிஎல் வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

    இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.

    மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

    ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.

    • அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது. 

    ×