என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cameron Green"

    • சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் நேற்று வெளியிட்டது.

    சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.

    இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஆண்ட்ரே ரசலை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கேகேஆர் இருக்கும்.. எனக்கு தெரிந்து கேமரூன் கிரீன் சிஎஸ்கேவை விட கேகேஆர் அணிக்கு தான் தேவையான வீரராக இருப்பார். அதனால் கிரீனின் விலையை சிஎஸ்கே அணி ஏற்றிவிடவேண்டும், அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழுவீச்சில் செல்லமுடியும்.. சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸால் பவுலிங் மற்றும் சிறந்த ஃபினிசிங் போன்றவற்றிற்கு ரஸ்ஸல் சிறந்த தேர்வாக இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
    • கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக மார்னஸ் லெபுசென் இடம் பெற்றுள்ளார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (669 புள்ளி 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.

    அதிரடியாக சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 650 புள்ளியுடன் 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 616 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் நீடிக்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    • 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

    இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.

    கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் 276 ரன்கள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • 250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.
    • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

    இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

    கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீச தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம்.
    • எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது.

    எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கேற்பு விதிமுறைகளை தெளிவாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கெல்லாம் சம்மதித்து கேமரூன் கிரீன் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார்.

    அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

    • உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
    • டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார்.

    20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது.

    ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.

    உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

    இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.

    டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது.
    • அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும்.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

    கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்சை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அவர் 47 பந்தில் 100 ரன்களை குவித்தார்.

    கேமரூன் கிரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை. சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

    ஆனால் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு கிரீன் சரியான ஆளுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான கிரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்சின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

    என்று இர்பான் பதான் கூறினார்.

    • இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
    • குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது.

    இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    மும்பை அணி 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 6 தோல்வி பெற்று 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெளியேறுதல் சுற்றில் லக்னோவை தோற்கடித்தது.

    இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இது தொடர்பாக மும்பை அணியின் ஆல்ர வுண்டர் கேமரூன் கிரீன் கூறியதாவது:-

    இத்தொடரை நாங்கள் மெதுவாக தொடங்கிேனாம். ஆனால் சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும். அந்த எழுச்சியை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

    சூர்யகுமார் யாதவுடன் பேட்டிங் செய்வது எளிதான வேலை என்று நினைக் கிறேன். குஜராத் ஒரு கடினமான அணி. ஆனால் நாங்கள் எல்லா நம்பிக்கை யுடனும் அவர்களுடன் மோதுேவாம். அவர்களிடம் வலுவான செயல்திறன், விளையாட்டின் விரிவான அணுகுமுறை உள்ளது.

    குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அற்புதமான வடிவத்தையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், நூர் அகமது செயல் திறனையும் பெற்று உள்ளனர்.

    குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் இதுவரை 15 ஆட்டத்தில் 422 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • ஆல் ரவுண்டர் பணியில் கேமரூன் க்ரீன் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
    • ஆஸ்திரேலியாவின் முதல் இலக்கு விராட் கோலியாகத்தான் இருப்பார்

    கிரிக்கெட்டில் உலகில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பற்றிதான் பேசப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது. ஸ்லெட்ஜிங், மோதல், முறைத்தல் போன்றவைகளை பார்க்கலாம்.

    மைதானத்தில் எலியும் பூனையாக மோதிக்கொண்டாலும் வெளியில் நண்பர்களாக ஒருவரை ஒருவர் பாராட்டுவது நடைபெற்றுதான் வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் ஆஸ்திரேலியா அணியில் உள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பது உறுதி.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கேமரூன் க்ரீன் கூறுகையில் ''விராட் கோலி, மிகப்பெரிய தருணம், அதாவது மிகப்பெரிய போட்டியில் முன்னணி வீரராக உயர்ந்து நிற்க எப்போதுமே முயற்சி மேற்கொள்வார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையிலேயே மிகப்பெரிய தருணம். ஆகவே, நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    களத்தில் இறங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஏதும் இல்லை. பதற்றமான நிலையுடன் அதிக டென்சன் உண்டாகும். அதை கையாளத் தெரிந்த சிறந்த வீரர் சிறந்த வீரராக திகழ்வார்.

    ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி, சுப்மான் கில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×