என் மலர்

    நீங்கள் தேடியது "Cameron Green"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
    • டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார்.

    20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது.

    ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.

    உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

    இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.

    டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீச தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம்.
    • எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது.

    எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கேற்பு விதிமுறைகளை தெளிவாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கெல்லாம் சம்மதித்து கேமரூன் கிரீன் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார்.

    அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    ×