search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marnus Labuschagne"

    • இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து லைட்டர் கேட்டார்.
    • சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.


    இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து புகைப்பிடிப்பது போல சைகை காட்டி லைட்டர் கேட்டார். இதை கவனித்த வர்ணனையாளர்கள் சிரித்தபடி கமெண்ட் செய்தனர்.

    அவர் ஹெல்மெட் சரிபார்ப்பதற்காக அதை கேட்டார். ஆனால் இது சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே இடம்பெறவில்லை. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாட முக்கிய பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆனால், வரும் சனிக்கிழமை தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சமி அஸ்லாம், 2. அபித் அலி, 3. இஃப்தோகர் அகமது, 4. ஆசாத் ஷபிக், 5. உஸ்மான் சலுயாஹுதின், 6. சாத் அலி, 7. அகா சல்மான், 8. முகமது ரிஸ்வான், 9. வஹாப் ரியாஸ், 10. ரஹத் அலி, 11. வகாஸ் மெக்சூட், 12. ஆமெர் யாமின், 13. உமைத் ஆசிப், 14. சவுத் ஷகீல்.
    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக லயன் தெரிவித்துள்ளார். #PAKvENG
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி ஆசியா கண்டத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    அடுத்த மாதம் ஆஸ்திரேலியா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அப்போது ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் புனே டெஸ்டில் விளையாடும்போது அந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால், நாங்கள் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடக்கூடாது?.


    டிராவிஸ் ஹெட்

    ஆனால் நாங்கள் கடந்த முறை சென்றிருந்த போது ஆடுகளம் பிளாட்டாக இருந்தது. தற்போது நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க தயாராகுவோம். இருந்தாலும், அங்குள்ள கண்டிசனை பார்க்கும்வரை உறுதியாக கூறுவது கடினம்.

    என்னைத் தவிர மார்னஸ் லபுஸ்சேக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஐந்தாவது மற்றும் 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார்கள். நன்றாக பந்தும் வீசுவார்கள்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் 5 புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட டி20 டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் டெஸ்ட் தொடர் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரோன் பிஞ்ச் உள்பட ஐந்து புதுமுக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் டி20 அணியின் கேப்டனாக இருந்த போதிலும் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.



    ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), 2. அஷ்டோன் அகர், 3. பிரெண்டன் டாக்கெட், 4. ஆரோன் பிஞ்ச், 5. டிராவிஸ் ஹெட், 6. ஜான் ஹோலண்ட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லபுஸ்சாக்னே, 9. நாதன் லயன், 10. மிட்செல் மார்ஷ், 11. ஷான் மார்ஷ், 12. மைக்கேல் நேசர், 13. மேத்யூ ரென்ஷா, 14. பீட்டர் சிடில்.

    இதில் பிஞ்ச் உடன் டிராவிஸ் ஹெட், நேசர், டாக்கெட், மார்னஸ் ஆகியோர் இதுவரை டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியது கிடையாது.
    ×