என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Matheesha Pathirana"
- வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
- டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்
மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை.
லக்னோ:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு குமார இடம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பதிரனா முதல் போட்டியில் 95 ரன்களும் 2-வது போட்டியில் 90 ரன்களையும் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.
- முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.
பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்