search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trent Boult"

    • ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை உடனே இழந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • மும்பை அணியில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் மும்பை அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து கேப்டன் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    சிறப்பாக ஆடிய பாண்ட்யா 34 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாவ்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய திலக் 32 ரன்னிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • பவர் பிளேயில் மொத்தம் 3 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். 4-வது பந்தில் இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார்.

    போல்ட் 80 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார். 2-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். இவர் 116 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    வெலிங்டன்:

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்டு 30, செப்டம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 8, 10, 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. முன்னதாக நியூசிலாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி துபாயில் வருகிற 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியில், கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இதேபோல் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இருவரது வருகையும் நியூசிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். போட்டியின் போது முழங்காலில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து தேறி வருகிறார். அவர் அணியினருடன் இங்கிலாந்து சென்று காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ள இருக்கிறார். வில்லியம்சன் ஆட முடியாததால் டாம் லாதம் கேப்டனாக தொடருகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-

    20 ஓவர் அணி: டிம் சவுதி (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாப்மேன், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் செய்பெர்ட், சோதி.

    ஒருநாள் போட்டி அணி: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலென், டிரென்ட் பவுல்ட், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, வில் யங்.

    • இந்த முடிவால் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும்.
    • நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் புதன்கிழமை தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

    "போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் டி20 போட்டியில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். சமீப காலமாக நியூசிலாந்து அணியுடன் குறைவான பங்கை கொண்டிருந்தார். போல்ட் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில் அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

    இது குறித்து டிரெண்ட் போல்ட் கூறியதாவது:-

    இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    கடந்த 12 ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன்.

    இந்த நடவடிக்கையானது நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது. மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்.

    இவ்வாறு போல்ட் கூறினார்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.



    பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். #PAKvNZ #NZvPAK #TrentBoult
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.



    ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் போல்ட் ஆவார். டேனி மோரிசன் (இந்தியாவுக்கு எதிராக, 1994-ம் ஆண்டு), ஷேன் பான்ட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007) ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்து அணியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். #PAKvNZ #NZvPAK #TrentBoult


    அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

    அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ    
    நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்ச்கள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு டெல்லி வீரரான விஜய் சங்கர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. அந்த அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


    இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய பந்தை பொலார்டு சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த பந்தை டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, பின்னர் பவுண்டரியைத் தாண்டுவதற்கு முன் சக வீரரான போல்ட்டிடம் பந்தை வீசினார். அந்த பந்தை போல்ட் கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆக்கினர்.



    அந்த கேட்சை தொடர்ந்து, ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் ஒன்று சேர்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். முன்னதாக பஞ்சாப் அணியின் மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து இதேபோன்று கேட்ச் பிடித்து ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர்.

    இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் கிளென் மேக்ஸ்வெல், டிரெண்ட் போல்ட் ஜோடி இரண்டு முறை கேட்ச் பிடித்து அசத்தியுள்ளது. #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
    ×