என் மலர்
நீங்கள் தேடியது "மதீஷா பதிரனா"
- இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
- பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரும் நடைபெற உள்ளது.
கொழும்பு:
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில்
விளையாடுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்கா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எசான் மலிங்கா அணியில் இணைந்துள்ளார்.
மிலான் ரத்நாயக, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்கா ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷ்ரா, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதார, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மலிங்கா
இதேபோல், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு டி 20 தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுழற்பந்து வீச்சாளரான மதீஷ பதிரன அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளார்.
சரித் அசலங்க (கேப்டன்), பதும நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா, கமில் மிஷ்ர, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. முத்தரப்பு டி20 தொடர் 17-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது.
- பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷுகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.
- இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா பார்க்கப்படுகிறார். இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
இளம் வீரரான பதிரனாவின் இந்த எழுச்சிக்கு டோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷுகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்று தல டோனி கூறியபோது மல்லி பாதுகாப்பான கைகளில் இருப்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதையும் தாண்டியது.
எனக் கூறியிருக்கிறார்.
இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.
- முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.
பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
- இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும். சென்னை அணியில் இடம் பெற்றிருந்த பதிரனா அசத்தலான பந்து வீச்சால் சென்னை மக்களின் மனதை கவர்ந்தார். டி20-யில் பட்டைய கிளப்பிய பதிரனா, ஒருநாள் போட்டியில் சோதப்பியது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் 3 ஓவர்களில் 7 வைடுகளை வீசிய அவர் அடுத்த 5 ஓவர் முடிவடைய நிலையில் 9 வைடுகளை வீசியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 4ஆம் தேதி நடக்க இருக்கிறது.
- இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
- அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்று சாதனை.
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கை பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (மே 21) நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான மதீஷா பதிரனா அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

2024 எல்.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மதீஷா பதிரனா 50 ஆயிரம் டாலர்கள் எனும் ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிட்டன. இதன் காரணமாக இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணி மதீஷா பதிரனாவை 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 99 லட்சத்து 96 ஆயிரத்து 900 விலைக்கு தனது அணியில் எடுத்தது. அந்த வகையில், எல்.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மதீஷா பதிரனா படைத்துள்ளார்.






