என் மலர்
நீங்கள் தேடியது "கேகேஆர்"
- புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
- நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மற்றும் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வி அடைந்தால், பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடும்.
பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் இன்றைய போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
பெங்களூரு:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
- பின்னர் 17ஆம் தேதி (இன்று) மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8ஆம் தேதி டெல்லி- பஞ்சாப் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து (மே 17ஆம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- கேகேஆர் இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது.
ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 2-ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.
- புள்ளிகளில் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
- கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை எதிர்பார்க்க முடியும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். பிளேஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லாத அணிகள் இன்னும் 2 முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது. இதனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத வெளிநாட்டு வீரர்கள் உள்பட சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொந்த காரணத்தை காட்டி விலக இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 12 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. 17ஆம் தேதி ஆர்சிபியையும், 15ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு பேட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தேட முடியும்.
- ரகானே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நூர் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். 2ஆவது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் குர்பாஸ் 9 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. 8ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் (17 பந்தில் 26) ரன், ரகுவன்ஷி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விளையாடிய ரகானே 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரகானே ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் அந்த்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். அந்தரே ரசல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தாவுக்கு 18ஆவது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். மொத்தமாக 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- நடப்பு சாம்பியன் கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
- மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும்.
ஐ.பி.எல். நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு தற்போது நடைபெற்று வரும் சீசன் இதுவரை சிறப்பாக அமையவில்லை. 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம். மும்பை போன்று தொடர் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து வருவோம் என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-
உறுதியாக எங்களால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். நீங்கள் இந்த தொடரில் சற்று பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், மும்பை இந்தயின்ஸ் கூட மோசமாக தொடரை தொடங்கியது. தற்போது தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பிளேஆஃப் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கும் அதே மாதிரியான மனநிலை தேவை. தற்போது பாதி தொடரை கடந்துள்ளோம். நாங்கள் ஏறுக்குறைய அனைத்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. அதன்பின் 3ஆவது போட்டியில் பெற்றி பெற்றது. அதன்பின் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. பின்னர் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் படியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
- தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியில் 20 ஓவர்கள் விளையாடிய சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது. இதன்மூலம் 25,500 மரங்களை நட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.
இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக விரைவில் மாறிவிடும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 61 Dot Ball பந்துகளை வீசியதை குறிக்கும் விதமாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மரம் நடுவது போன்ற புகைப்படத்தை அந்த அணி வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின
- கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெற்றியை குட் பேட் அக்லி பட ஸ்டைலில் கொண்டாடி கே.கே.ஆர். அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது
- சி.எஸ்.கே. அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், தொடர் தோல்விகள் குறித்து பேசிய சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி "நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். எனினும் ஒரு வெற்றி எங்களது மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்புகிறேன் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும். ப்ளே ஆப் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை செய்ய முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின.
- ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே. அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது" என்று புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த பதிவின் கீழே கமெண்ட் செய்துள்ள கே.கே.ஆர். அணி "சே.எஸ்.கே. ஒரு சாம்பியன் அணி. நீங்கள் வலுவாக மீண்டு வருவீர்கள்" என்று ஆறுதல் கூறியுள்ளது.
- சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான்.
- பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள்.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 103 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த மோசமான தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான். நாம் அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும், நாம் எங்கு தடுமாறுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சவாலை நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில் போதுமான ரன்னை எடுக்கவில்லை.
பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள். அவர்கள் சோர்வடைய தேவையில்லை. தொடக்கத்திலேயே விக்கெட் சரிவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் விரக்தி அடையாமல் இருப்பது முக்கியம். போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறி உள்ளார்.
- சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
- பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக அவுட் கொடுத்தார்.
தோனி ரன்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.






