search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvKKR"

    • முதல் ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன.
    • ஆர்சிபி இந்த சீசனில் முதன்முறையாக நேற்று சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐபிஎல் 2024 சீசன் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    சென்னை அணிக்கு சேப்பாக்கம், ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஈடன் கார்டன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ப்பூர் மைதானம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்,

    எல்எஸ்ஜி-க்கு லக்னோ வாஜ்பாய் மைதானம், குஜராத் அணிக்கு அகமதாபாத் மைதானம், டெல்லிக்கு விசாகப்பட்டினம், மும்பைக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு முல்லன்புர் மைதானம் சொந்த மைதானங்களாகும்.

    சிஎஸ்கே- ஆர்சிபி போட்டியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் வரையிலான 9 போட்டிகளில் சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன. இதனால் "ஹோம் டீம் வின்" டிரெண்ட் நீடித்து வந்தது.

    இந்த நிலையில்தான் நேற்று ஆர்சிபி- கேகேஆர் இடையிலான ஆட்டம் ஆர்சிபி அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெளியில் இருந்து வந்த கேகேஆர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஹோம் டீம் வின் டிரெண்ட்-க்கு கேகேஆர் முற்றுப்புள்ளி வைத்து வெளியில் இருந்து வந்த அணி (Away Team) வெற்றி என்ன டிரெண்ட்-ஐ தொடங்கி வைத்துள்ளது.

    ×