என் மலர்
நீங்கள் தேடியது "RCBvKKR"
- புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
- நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மற்றும் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வி அடைந்தால், பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடும்.
பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் இன்றைய போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
பெங்களூரு:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- முதல் ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன.
- ஆர்சிபி இந்த சீசனில் முதன்முறையாக நேற்று சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் 2024 சீசன் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.
சென்னை அணிக்கு சேப்பாக்கம், ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஈடன் கார்டன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ப்பூர் மைதானம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்,
எல்எஸ்ஜி-க்கு லக்னோ வாஜ்பாய் மைதானம், குஜராத் அணிக்கு அகமதாபாத் மைதானம், டெல்லிக்கு விசாகப்பட்டினம், மும்பைக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு முல்லன்புர் மைதானம் சொந்த மைதானங்களாகும்.
சிஎஸ்கே- ஆர்சிபி போட்டியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் வரையிலான 9 போட்டிகளில் சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன. இதனால் "ஹோம் டீம் வின்" டிரெண்ட் நீடித்து வந்தது.
இந்த நிலையில்தான் நேற்று ஆர்சிபி- கேகேஆர் இடையிலான ஆட்டம் ஆர்சிபி அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெளியில் இருந்து வந்த கேகேஆர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஹோம் டீம் வின் டிரெண்ட்-க்கு கேகேஆர் முற்றுப்புள்ளி வைத்து வெளியில் இருந்து வந்த அணி (Away Team) வெற்றி என்ன டிரெண்ட்-ஐ தொடங்கி வைத்துள்ளது.






