என் மலர்
நீங்கள் தேடியது "Mustafizur Rahman"
- ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார்.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 28-ம் தேதி முதல் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார்.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அதன்படி பஞ்சாப் கிங்சுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார். மேலும் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் கலித் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்-க்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முஸ்தஃபிசுர் சென்றுள்ளார்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், UAE தொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றதால் குழப்பம்
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் புறப்பட்டு சென்றதால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்று கோரி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வராததால், ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி அவர் UAE புறப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. நிசாமுதின் தெரிவித்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
மும்பை:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
- சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
- வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
- டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்
மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவர் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
- நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 40.2 ஓவரில் 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தபிசுர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
- ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
- நேற்றைய போட்டியில் காயமடைந்த வங்காளதேச வீரர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு கிளம்பியுள்ளார்.
டாக்கா:
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள். அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Whistle Vanakkam, @Mustafiz90! ?#WhistlePodu #DenComing pic.twitter.com/KGGzd3LTSg
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2024
- முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வரும் 5-ம் தேதி ஐதராபாத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசுர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின் அவர் வரும் 7-ம் தேதி அல்லது 8-ம் தேதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் 8-ம் தேதி இந்தியா திரும்புவதாக இருந்தால் அவர் அன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தையும் தவற விட வாய்ப்பு உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முஸ்தாபிஜூர் ரஹ்மான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- சாஹிப் அல் ஹன் கண் பிரச்சனை காரணமாக விளையாடாமல் இருக்கிறார். குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் இடம் பெறவில்லை.
ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மே 3-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் மூன்று போட்டிக்கான வங்காளதேசம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்-ரவுண்டர் சாஹிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
சாஹிப் அல் ஹன் கண் பிரச்சனை காரணமாக விளையாடாமல் இருக்கிறார். குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் இடம் பெறவில்லை. மேலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராகும் வகையில் டாக்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஆஃபிஃப் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறது. அவர் மே 1-ந்தேதி பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடிய பின், சொந்த நாடு திரும்புகிறார். இருந்த போதிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.
முஸ்தாபிஜூர் ரஹ்மான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என வங்காளதேசம் தெரிவித்துள்ளது.
- நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
- களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.
எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.
இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.
- உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்கள் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. இந்த புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முஸ்தஃபிசுர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் வெற்றி பெற போட்டியில் கூட சென்னை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.
சிஎஸ்கே அணிக்கு பந்து வீச்சுக்கு பக்க பலமாக இருந்த வங்காள தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் சிஎஸ்கே அணியில் இருந்து விடை பெற்றார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களது மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி.
அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களை மீண்டும் சந்திக்கவும், மீண்டும் உங்களுடன் சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.
போட்டியின் மத்தியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தசைப்பிடிப்பால் சற்று அவதிப்பட்டார். அவர் 10 ஓவர் முழுவதும் வீச வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அவரால் 10 ஓவரை நிறைவு செய்ய முடியவில்லை. அவர் பந்து வீசியது மிகவும் கடினமானது’’ என்றார்.






