என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் சூப்பர் லீக்"
- இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- எஞ்சிய பிஎஸ்எல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. அதேபோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுகோளை யுஏஇ நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போர்டுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்தியாவில் நடைபெறக் கூடிய போட்டிகளுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் அங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் எமிட்ரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முன்னிட்டு பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்டு நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அவசர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னதாக ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் எக்ஸின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது துபாயில் நடைபெறும் என்று பிசிபி உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும், மேலும் அனைத்து அணிகளும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் துபாய்க்கு அனுப்பப்படும்.
- இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
- பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருவதால் பாதுகாப்பு குறித்து கவலை.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி அழித்தது. அதேவேளையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டிரோன் தாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு யோசிக்க தொடங்கியது.
ஏனென்றால் டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், வான் டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனையை கிரிக்கெட் போர்டு பன்பற்றும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் சிஇஓ சல்மான் நசீர், வெளிநாட்டு வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
- பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.
இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.
ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.
- 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது
- தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.
இந்த வருடம் 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக கார்பின் போஷ் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
- கார்பின் போஷ்கை ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனானது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் கார்பின் போஷ்கின் இந்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் பங்கேற்பதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த பிஎஸ்எல் தொடரில் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்பதையும் பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னுடைய முடிவின் காரணமாக கார்பின் போஷ் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
- மும்பை இந்தியன்ஸ் அணி கார்பின் போஷ்-யை ரூ.75 லட்சத்திற்கு மும்பை ஒப்பந்தம் செய்தது.
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்-யை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, கார்பின் போஷ்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் நடைபெறும் அதே நேரத்தில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் விளையாடுவதற்காக கார்பின் போஷ் தனது பிஎஸ்எல் ஒப்பந்தத்தை ரத்து செய்வார் என்று கூறப்படுகிறது.
- பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின.
- 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி இன்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது, பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில், யுவராஜி சிங் பாணியில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவர் சிக்சர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தின் டான் வான் பங்கேவின் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசினார். அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார்.
இதேபோல், முதல் தர கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆவார். அவர் 1984-85 ரஞ்சிக் கோப்பை தொடரில் பரோடாவுக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
- டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் உடனடியாக சரி செய்யப்பட்டது.
- மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பிஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்த தொடரின் 2023-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மைதானத்தில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம், சலசலப்புக்கு பின்னர் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்கள் இடையிலான போட்டி 30 நிமிடம் காலதாமதமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் வெடி ஒன்று மின் விளக்கு மீது மோதி வெடித்தது. இதன் மூலம் ஏற்பட்ட தீபொறி மின் விளக்கில் பற்றி எரிந்துள்ளது. பின்னர் உடனடியாக மின்விளக்குகள் ஒளிருவது நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.
ملتان اسٹیڈیم میں پی ایس ایل کی افتتاحی تقریب کے دوران ہونے والی آتش بازی کے باعث فلڈ لائٹس میں آگ لگ گئی... ریسکیو عملے نے آگ پر قابو پا لیا ہے#PSL8 pic.twitter.com/Td940KTWKP
— Qadir Khawaja (@iamqadirkhawaja) February 13, 2023
இதைத்தொடர்ந்து மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, போட்டி காலதாமதமாக தொடங்கப்பட்டது. மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய லாகூர் அணி 200 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய முல்தான் அணி 199 ரன்கள் எடுத்து தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.
கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது.
இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.
- முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.
- பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.
முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
PAKISTAN "SMOKING" LEAGUE ???#HBLPSL9 #HBLPSLFinal pic.twitter.com/pwpaj4bLh8
— Farid Khan (@_FaridKhan) March 18, 2024
முல்தான் சுல்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.
போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.






