search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Super League"

    • கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் மோரிசன் இவ்வாறு செய்வது இது முதல் முறை அல்ல.
    • அவர் முன்னாள் ஐபிஎல் தொகுப்பாளர் கரிஷ்மா கோடக்குடன் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்.

    2023-ம் ஆண்டுக்கான பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இதுவரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு மூன்று பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கிரிக்கெட் போட்டி தவிர வர்ணனையாரின் செயலும் ரசிகர்களை வியப்படைய வைத்தது. இந்த போட்டிக்கு முன்பு வர்ணனையாளர் டேனி மோரிசன் தொகுப்பாளர் எரின் ஹாலண்டைத் தூக்கிக் கொண்டு சுற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இந்த வீடியோவை ஹாலண்ட் அவர்களே டுவிட் செய்து லவ் யா மாமா என்று பதிவிட்டுள்ளார்.

    கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் மோரிசன் இவ்வாறு செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஒரு சியர்லீடரை தோளில் தூக்கியிருந்தார். மற்றொரு சம்பவத்தில், அவர் முன்னாள் ஐபிஎல் தொகுப்பாளர் கரிஷ்மா கோடக்குடன் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்.

    • டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் உடனடியாக சரி செய்யப்பட்டது.
    • மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பிஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்த தொடரின் 2023-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

    பாகிஸ்தானிலுள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மைதானத்தில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம், சலசலப்புக்கு பின்னர் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்கள் இடையிலான போட்டி 30 நிமிடம் காலதாமதமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் வெடி ஒன்று மின் விளக்கு மீது மோதி வெடித்தது. இதன் மூலம் ஏற்பட்ட தீபொறி மின் விளக்கில் பற்றி எரிந்துள்ளது. பின்னர் உடனடியாக மின்விளக்குகள் ஒளிருவது நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.


    இதைத்தொடர்ந்து மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, போட்டி காலதாமதமாக தொடங்கப்பட்டது. மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின.
    • 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி இன்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

    குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது, பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில், யுவராஜி சிங் பாணியில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவர் சிக்சர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தின் டான் வான் பங்கேவின் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசினார். அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார்.

    இதேபோல், முதல் தர கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆவார். அவர் 1984-85 ரஞ்சிக் கோப்பை தொடரில் பரோடாவுக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    ஓராண்டு தடை பெற்றுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Smith #BPL
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்களின் சங்கங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தது.

    ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் முதன்மையான தொடரில் விளையாட தடைவித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால் தற்போது புகழ்பெற்று வரும் டி20 லீக்கில் களம் இறங்க முடிவு செய்தார்.

    அதன்படி கனடா மற்றும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் மாலிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. இதனால் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘‘நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிக்குப்பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்’’ என்று அந்த அணி தெரிவித்துள்ளது.

    மற்றொரு வீரரான டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் பாகிஸ்தானில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என்று டி வில்லியர்ஸ், ஸ்மித் தெரிவித்துள்ளனர். #PSL
    இந்திய பிரிமீயர் லீக், பிக் பாஷ், கரிபியன் பிரிமீயர லீக் டி20 கிரிக்கெட் தொடரை போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லீக்கை நடத்தி வருகிறது. சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி, பிளே-ஆப்ஸ் போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்தி வருகிறது. 2019 சீசனில் பெரும்பாலான ஆட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஓய்வு அதிக அளவில் உள்ளது.



    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித்தும் ஓராண்டு தடை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

    இரண்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் மேலும் பிரபலமடையும். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும்தான் விளையாடுவோம். பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8 ஆட்டங்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பிசிபி சேர்மன் நஜம் சேதி தெரிவித்துள்ளார். #PSL
    இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் வந்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயம் அடைந்தார்கள். இதனால் தொடரை பாதிலேயே ரத்து செய்துவிட்டு இலங்கை அணி வெளியேறியது.

    அதன்பின் முன்னணி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது.

    தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்களது சொந்த மைதானமாக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதேவேளையில் ஐக்கிய அரபு எமிடேஸில் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடைபெற இருக்கின்றன.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடருக்கு மைதானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த அநாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிகள் மற்றும் பிளேஃஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.



    இந்நிலையில் அடுத்த சீசனில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் உள்ள மூன்ற மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாகூர் மற்றும் கராச்சி மைதானங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். மூன்றாவது மைதானம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று நஜம் சேதி கூறியுள்ளார். #PCB #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ டி20 தொடரை நடத்தி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே டி20 தொடரில் மட்டும் விளையாடியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற சீசனின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் மற்றும் இறுதிப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. மேலும் உலக லெவன் அணிக்கெதிராக டி20 தொடரையும் பாகிஸ்தானில் நடத்தியதால் மற்ற அணிகளையும் பாகிஸ்தான் அழைக்க திட்டமிட்டுள்ளது.



    நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுபற்றி யோசித்து வருவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில் அடுத்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி கூறியுள்ளார். இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச போட்டிகளை காண வாய்ப்புள்ளது.
    ×