என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schedule Release"

    • விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளி யாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தற்போது துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அர சுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    ஜூன் 24 மொழிப்பாடம், ஜூன் 25-ஆங்கிலம், ஜூன் 26-கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28-கணினி அறிவியல், புள்ளிவிவரங் கள், உயிர் வேதியியல், ஜூன் 28-இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங் கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.

    ஜூலை 2-மொழிப் பாடம், ஜூலை 3-ஆங்கிலம், ஜூலை 4-இயற்பியல், பொருளியல், ஜூலை 5-கணினி அறிவியல், தொடர்பி யல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6-தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

    • 9 ஆண்டுகளாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
    • கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இந்நிலையில் 9 சீசன் முடிவடைந்த நிலையில் 10-வது சீசன் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் மற்றும் 2 முறை சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதுகிறது.

    இந்த தொடர் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மார்ச் 23-ல் தொடங்கி மே 25 வரை நடக்கிறது. கிட்டத்தட்ட இரு தொடர்களும் ஒரு நேரத்தில் மோதிகொள்ளும் வகையில் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×