என் மலர்
நீங்கள் தேடியது "நாய்ஸ் எக்ஸ் பிட் 1"
- 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
- முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.
தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதியம் இணையதளத்தில் வெளியானது. மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.
- 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
- தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!
பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!
இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விரும்புவோர் மே 22 முதல் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரும் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிக்கலாம்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
- பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
சென்னை:
பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரையிலும் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-1 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேரும் எழுதி இருந்தார்கள். ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டு இருந்தபோது, தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை போன்றே பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான சூழல் இருப்பதாகபேசப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசிய நிலையில், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.
மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும், மாணவ-மாணவிகளில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது.
- சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது.
சென்னை:
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடந்தது.
இதில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது. அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன் கூட்டியே வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.
மேலும் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வி, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 2024-25-ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால், அரசு தேர்வுகள் இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை https//results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்கண்டு உள்ள இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கெள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.
நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.
பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
- விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.
அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.
இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்றன.
- மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ- மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
காலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பிற்பகல் 2 மணியளவில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
- ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
- அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும்.
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 4-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்த மாதம் 26-ந்தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிக்கப்பட உள்ளன.
தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு பணிகள் தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுதவிர கடந்த ஆண்டு (2023) பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக பணியாற்றாத 1,000 ஆசிரியர்களை அடையாளம் கண்டு அரசு தேர்வுத்துறை அவர்கள் மீது றை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்து இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும், அவர்களை இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






