என் மலர்
நீங்கள் தேடியது "plus one"
- காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு:
பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 535 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.14 சதவீதம் பேரும், மாணவிகள் 94.14 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகளில் 12 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
இது 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 487 பேரில் 9 ஆயிரத்து 529 பேரும், (82.95 சதவீதம்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 816 பேரில் 6 ஆயிரத்து 372 பேர் தேர்ச்சி (81.59 சதவீதம்) பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 809 மாணவ-மாணவிகளில் 10 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 75.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
- அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும்.
- பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள், தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
பள்ளி வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் 85.75 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதமாகும்.
பாடப்பிரிவு வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:
அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும்.
பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள்:
தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171.
கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 62.
கணக்கு பதிவியல் 415, பொருளியல் 741, கணினி பயன்பாடுகள் 288, வணிக கணிதம், புள்ளியியல் 293.
- 96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
- அரசு பள்ளிப் பள்ளிகளை பொருத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந் துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.17 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.69 ஆகும்.
மாணவர்கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.26 ஆகும்.
பிளஸ்-1 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 0.24 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7534 ஆகும். இதில் 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 241 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியையும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியையும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியையும், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீத தேர்ச்சியையும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீத தேர்ச்சியையும், ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளன.
8418 மாணவ-மாணவிகள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8221 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். இதில் 7504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.27 சதவீதம் ஆகும். சிறை கைதிகள் 187 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 90.90 சதவீதம் ஆகும்.
96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
அரசு பள்ளிப் பள்ளிகளை பொருத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
மாணவ-மாணவிகள் www.tnresult.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.
- மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
- முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.
இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.
11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.
இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.
அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion