search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "half yearly"

    • கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது.
    • நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு.

    புதுச்சேரி:

    புதுவை நிறுவனங்களின் பதிவாளர் கோகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நிதி நிறுவனமானது அதன் உறுப்பினர்களுக்கு தங்கம், வெள்ளி நகைகள் உட்பட பிணையங்களுக்கு எதிராக மட்டுமே கடன் வழங்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. தனி நபர் கடன் பிணையமாக வழங்கப்படும் சொத்து மதிப்பில் 50 சதவீதத்திற்கு மிகக்கூடாது. இந்த கடனை திருப்பி செலுத்தும் கால அளவு 7 ஆண்டுக்கு மிகக்கூடாது. நிதி நிறுவனம் தனி நபர் ஒருவரை 5 ஆண்டுக்கு மேல் தொடர்ச்சியாக தணிக்கையாளராக பணி அமர்த்தக்கூடாது.

    நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு அரையாண்டு முடிவடைந்த 30 நாளில் பதிவாளரிடம் தொழிற்பயி ற்சியில் உள்ள நிறுவன செயலர், பட்டய கணக்கர், கணக்காளரால் உரிய சான்றளிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

    விதிகளில் உள்ள அனைத்து சட்ட வரைமுறை களுக்கும் நிறுவனம் இணங்கி நடந்துள்ளதற்கான சான்றிதழை நிறுவனத்தின் தணிக்கையாளர் ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் தணிக்கை அறிக்கையுடன் இணைக்க வேண்டும். முதலீட்டாளர்கள் முதலீடு அல்லது வைப்பீடு எதையும் செய்யும் முன் மத்திய அரசின் அதிகார முறை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இருந்து நிதி நிறுவனத்தின் தகுதி நிலையை சரிபார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிளஸ்-1 வேதியியல் வினாத்தாளை இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

    இதில் சமீபத்தில் நடந்த உயிரியல் கேள்வித்தாள் இணைய தளத்தில் வெளியானது. இந்த வினாத்தாளும், தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரி இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.

    அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion

    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. #SchoolExamDate #Holidays
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.

    9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).

    செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன் கூட்டியே விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
    ×