search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
    X

    பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

    • தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
    • முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது.

    இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

    இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×