search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shoaib Malik"

    • சானியா மிர்சா- சோயிப் மாலிக் இடையே விவாகரத்து ஆனதாக செய்திகள் வெளியானது.
    • சோயிப் மாலிக் நடிகை சானா ஜாவித்தை திருமணம் செய்ததன் மூலம் அது உண்மையாகியுள்ளது.

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

    கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால், அவ்வப்போது இருவரும் சேர்ந்து காணப்பட்டனர்.

    பின்னர் இருவருக்கும் இடையில் விவாகரத்தானதாக தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

    இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் விவாகரத்து பெற்றதாக வெளியான வதந்தி உண்மையாகிவிட்டது.

    சோயிப் மாலிக்கின் 2-வது திருமணம் குறித்து தற்போது சானியா மிர்சா குழு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எழுதப்பட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சானியா மிர்சா பொதுவெளியில் இருந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கியே வைத்திருப்பார். எனினும், இன்று தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்- சானியா மிர்சா இடையே விவாகரத்தாகி சில மாதங்கள் ஆகிறது. சோயிப் மாலிக்கின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார்.

    அவருடைய வாழ்க்கையின் முக்கியமான இந்நேரத்தில், அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சானியா மிர்சாவின் தனியுரிமையை மதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களில் ஈடுபடுவதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதியருக்கு இஷான் என்ற 5 வயது மகன் உள்ளார்.

    பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை மணந்தார் சோயிப் மாலிக்

    லாகூர்:

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

    இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

    இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
    • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

    மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

    குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

    தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

    2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


    ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

    2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

    இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    திருமணம் கடினமானது.

    விவாகரத்து கடினமானது.

    உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

    கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    • சானியா மிர்சா சோயிப் மாலிக் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.


    இந்த நிலையில் மீண்டும் இருவர் குறித்த விவாகரத்து வதந்தி மீண்டும் எழுந்துள்ளது. இந்த வதந்திக்கு மாலிக்கின் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கியுள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை.
    • இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.

    கராச்சி:

    இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை. இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.

    இந்நிலையில், தானும் தனது மனைவியும் எந்தவித விவாகரத்து நடவடிக்கையிலும் இல்லை எனவும் தாங்கள் பிரிந்திருக்கவும் இல்லை என்றும் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரம்ஜான் பெருநாளை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள்.

    அனைத்து திருமணங்களும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து செல்கின்றன. ஆனால் அதற்காக உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் தொடர்பில் இருப்பதால் பிசியான அட்டவணையை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிவதில்லை. எங்களுக்குள் பிரிவினை மற்றும் கருத்துவேறுபாடுகள் என வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை.

    என சோயிப் மாலிக் கூறினார்.

    • சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.
    • முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.

    ரூர்கி:

    உத்தர்காண்ட் சென்றிருந்த ரிஷப் பண்ட் சாலை மார்க்கமாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் சென்ற கார் ரூர்கி என்ற பகுதியை அடைந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. சாலையின் தடுப்பில் மோதிய அந்த கார், சுழன்றுக்கொண்டே சென்று இறுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிக்கிய ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து என அறிந்தவுடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அவர் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆல்ரவுண்டர் சதாப் கானும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் மாலிக், " பண்ட்-ன் விபத்து குறித்து தற்போது தான் தெரியவந்தது. சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்யப்போகிறேன் எனக்கூறியுள்ளார்.

    முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.

    இதே போல முன்னாள் வீரர் ஹசன் அலி, " ரிஷப் பண்ட்-க்கு எந்தவித பெரிய பாதிப்புகள் இருக்காது என நம்புகிறேன். நீங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். உங்களுடன் கடவுள் துணையாக நின்று சீக்கிரமாக குணப்படுத்துவார். களத்தில் மீண்டும் வாருங்கள், உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்திய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலக கோப்பையில், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 
    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஓராண்டு தடை பெற்றுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Smith #BPL
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்களின் சங்கங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தது.

    ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் முதன்மையான தொடரில் விளையாட தடைவித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால் தற்போது புகழ்பெற்று வரும் டி20 லீக்கில் களம் இறங்க முடிவு செய்தார்.

    அதன்படி கனடா மற்றும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் மாலிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. இதனால் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘‘நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிக்குப்பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்’’ என்று அந்த அணி தெரிவித்துள்ளது.

    மற்றொரு வீரரான டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.
    இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதியருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா(வயது 31). 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.



    இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

    ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சானியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் கணவர் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

    சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் டுவிட்டர், இண்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    ஐதராபாத்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் இந்தப்போட்டி நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரு அணிகளும் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடுவார். இதனால் தான் அப்படி கூறுகிறேன். அவர் அனுபவம் வாய்ந்தவர். சுழற்பந்தை எதிர்கொள்வதில் சோயிப் மாலிக் சிறந்த பேட்ஸ்மேன். மிடில் ஓவரில் நன்றாக ஆடக்கூடியவர்.

    மேலும் பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான பகர் ஜமான், பாபர் ஆசம் ஆகியோரை அதிகமாக சார்ந்து இருக்கும்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹாலும், குல்தீப் யாதவும் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு வி.வி.எஸ். லட்சுமண் கூறியுள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் ஹீரோதான் என்று சோயிப் மாலிக் கூறியுள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெறும் ஆட்டம் குறித்து தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹீராவாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாரல், ஹீராவாகி விடலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதனால் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வாய்ப்பாகும்.

    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் என்ககு வழக்கமான ஒரு போட்டியை போன்றதுதான். இதுபற்றி அதிக அளவில் யோசித்தால் நெருக்கடி பற்றிக்கொள்ளும்’’ என்றார்.
    இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்சாவிற்கு தொந்தரவு கொடுத்ததாக அவரது கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ளார். #SaniaMirza
    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சானியா மிர்சாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சோயிப் மாலிக் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாராக அளித்துள்ளார்.

    அதில் ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்காள தேசத்தில் நடந்த பிரிமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்காளதேச வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



    வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவர் மீது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை கூட விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×