search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby boy"

    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைதொடர்ந்து நள்ளிரவில் மீட்பு குழுவினர் தோண்டிய பள்ளத்தில் நடு நடுவில் பாறைகள் வந்ததால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

    மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


    • 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
    • மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு சாத்விக் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.

    இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்று க்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை, கால்கள் அசைவதை கேமிரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்தனர். 

    • குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார்.
    • கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டி பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் கமலபாபு (32).

    இவர் கோவையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார். பிறந்த 16 நாட்களேயான அந்த குழந்தைக்கு கடந்த 25-ந் தேதி இரவு 11.15 மணியளவில் திடீரென மூக்கில் ரத்தம் வந்து உடல் நிலை சரியில்லாமல் போனது.

    உடனடியாக குழந்தையை ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை ஒரு வழிப்பாதை ஆகும். இதனால் இந்த சாலை வழியாக எப்போதும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பஸ், லாரி என அனைத்து வாகனங்களும் செல்லும். அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று ஆண்குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு கடைக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை நலமாக உள்ளது. பிறந்து 10 நாட்கள் மட்டும் இருக்கும் என்று தெரிகிறது. குழந்தையை வீசி சென்ற பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து இங்கு வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசா்ர விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கடலூர் செல்லும் வழியில் அவர் பிரசவ வலியால் துடித்தார்.

    கடலூ ர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருேக முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்மணி()இவரதுமனைவி ஐஸ்வர்யா (வயது. 23), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்றுஅதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுஉடனே108ஆம்புலன்ஸ்க்குபோன் செய்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் திரிசங்கு, மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோ ர்விரைந்து சென்றுஐஸ்வர்யாவை கடலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து ச்சென்றனர்.

    கடலூ ர்செல்லும்வழியில் அவர்பிரசவ வலி யால் துடித்தார்.சிறிது நேரத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும்கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காகசேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர் 

    இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதியருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா(வயது 31). 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.



    இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

    ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சானியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் கணவர் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

    சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் டுவிட்டர், இண்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    ×