என் மலர்
நீங்கள் தேடியது "Zaheer Khan"
- நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு ஜாகீர் கான் திருமணம் செய்து கொண்டார்.
- 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமான ஜாகீர் கான், 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
இவர் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
இவர் நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஜாகீர் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது.
- பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது என ஜாகீர் கான் கூறினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளரே காரணம் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த விவகாரம் ஐபிஎல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.
பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
என ஜாகீர் கான் கூறியுள்ளார்.
- 2005-ம் ஆண்டில் இந்தியா போட்டியின் போது ஜாகீர் ஐ லவ் யூ என ரசிகை ஒருவர் பெயர் பலகை வைத்திருந்தார்.
- அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அவர்களது அணியில் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் இணைந்துள்ளார். லக்னோ அணியின் முன்னாள் ஆலோசகராக இருந்த கம்பீருக்கு பதிலாக ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜாகீர் கான் லக்னோ அணியில் இணைவதற்காக அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தார். அப்போது ஹோட்டலில் ரசிகர்கள் கையில் பெயர் பலகையுடன் அவரை வரவேற்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஜாகீர்கானின் தீவிர ரசிகையும் இருந்தார்.
20 ஆண்டுகளுக்குப் முன்பு பெங்களூருவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் ஜாகீர் ஐ லவ் யூ என பெயர் பலகை வைத்திருந்தார். அதனை மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
இதனை ஓய்வு அறையில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகையையும் ஜாகீர்கானை மாறி மாறி அந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர். உடனே ரசிகை ஜாகீர் கானை பார்த்து ஐ லவ் யூ என தெரிவித்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.
இதனை பார்த்த யுவராஜ், ஜாகீர் கான் சிரித்தனர். யுவராஜ் உடனே நீங்களும் முத்தம் கொடுங்கள் என தெரிவிக்க ஜாகீர் கானும் சிரித்தபடி பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதற்கு ரசிகை வெட்கப்பட்டும் அவர் வைத்திருந்த பெயர் பலகையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொள்வார்.
இவர்கள் இரண்டு பேரும் செய்த செயலை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக் சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.
அந்த ரசிகை அதே மாதிரி ஜாகீர் ஐ லவ் யூ என்ற பெயர் பலகையுடன் வெட்கத்தில் ஜாகீர் கானை பார்ப்பதும் அவரும் சிரித்தப்படி கடந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் லக்னோ அணி இதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
- உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர்.
- உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இப்போட்டி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியதாவது:-
இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும்.
உலகின் மற்ற பெரிய அணிகளுடன் போட்டி போடுவதற்கு வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு பல்வேறு பரிமானங்கள் தேவை. இடது கை பந்து வீச்சாளர், பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஒருவர் வேண்டும். பந்து வீச்சு வரிசையில் பல்வேறு வகைகளை பயன்படுத்த வேண்டும்.
உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர். நியூசிலாந்து தொடரில் அவர் வாய்ப்பு பெற வேண்டும். உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஜாகீர்கான், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும் போது, இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்காக எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. உள்நாட்டில் தற்போது இருப்பதும் வலுவான கட்டமைப்பு தான். நல்ல வீரர்களை உருவாக்குவதற்கு நம்மிடம் போதுமான வழிகள் உள்ளது என்றனர்.
- ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது.
- அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.
இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர்.
மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜாகீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை என்று தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது.
என்று கூறினார்.
- டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
- டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.
டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.
என்று கூறினார்.
- அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
- குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சூர்யகுமாரை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் ஐடியா கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் பந்து வீச தடுமாறுகிறார்கள்.
இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர்.
அவர் தனது பீல்டர்களை தேர்வு செய்து மட்டுமல்லாமல் அவருக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்காது.
எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது.
இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.
- 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
- அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.
இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-
கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.
ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.
கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.
ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.
கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.
(தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.
என்று பேசினார்கள்.
- இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
- பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.
பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
- ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
- குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
- 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளார்.
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
- லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.