search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvENG"

    • கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    • தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், கயானாவில் இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.

    ஆனால் கயானாவில் மழை பெய்து வருவதால் மைதானத்தைச் சுற்றி ஈரப்பதம் காணப்படுகிறது. இதையடுத்து, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
    • மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்

    ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :

    மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

    ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.

    ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.

    தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

    கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.

    இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.

    வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றது.
    • முதல் அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டினார்.

    டிரினிடாட்:

    டிரினிடாட் நகரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில், இந்த போட்டி டிரினிடாடில் நடந்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி டிரினிடாட் நகரில் நடந்திருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.

    திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. அதன்பின் அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும், புதிய மைதானத்தில் பழகவோ நேரம் இல்லை என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால், கயானாவில் 2வது அரையிறுதி நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • இன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று இரவு கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைபட்டு ரத்தானால் புள்ளிப்பட்டியலில் (சூப்பர் 8 சுற்று) முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்

    இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    மேலும், மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதலாக 250 நிமிடம் (4 மணி நேரம், 10 நிமிடம்) தரப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 10 ஓவர் விளையாடி இருந்தால் போட்டி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு கிறிஸ் கபானி மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது.

    இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.

    அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    நாளை காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
    • இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அசாதாரண திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்தார். இதுதொடர்பாக காலிங்வுட் கூறியதாவது:

    இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா முழுமையான ஃபார்மில் உள்ளார்.

    வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடைதர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.

    இன்னிங்சில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன.

    சவாலான, கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த முறை இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • இங்கிலாந்து எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த 4 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் தொடரை (4-1) வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது.

    இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பல கருத்துக்கள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த மோதலில் இதுதான் நடந்தது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன்.

    மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700-வது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தோம்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

    இதனை தொடர்ந்து கில்லுடன் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டசனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். அதற்கு அதனால் என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். அத்துடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    • ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
    • சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.

    இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.

    ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.

    ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.

    அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.
    • இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

    மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பலமுறை அவர்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தனர். இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.

    மேலும் 5 போட்டிகளில் அவர்கள் 3 முறை டாஸ் வென்றனர். எனவே ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது? என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார்? என்பதை யோசியுங்கள்.

    அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். ஓலி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை. எனவே உங்களுடைய இந்த ஆட்டத்தை பார்த்து அதில் முன்னேறும் வழியை பாருங்கள். அந்த வகையில் தான் ஒரு வீரராகவும் அணியாகவும் உங்களால் முன்னேற முடியும்.

    இவ்வாறு நாசர் ஹூசைன் கூறினார்.

    • டெஸ்ட் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (117 புள்ளி), 3வது இடத்தில் இங்கிலாந்தும் (111 புள்ளி) உள்ளன.

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியதன் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட்டுகளின் ஐ.சி.சி தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி பிடித்து அசத்தியுள்ளது.

    இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் (121 புள்ளி) மற்றும் டி20 கிரிக்கெட் (266 புள்ளி) தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×