search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மோசமோ மோசம்...! படுதோல்வியடைந்த இங்கிலாந்து குறித்து ஒரு புள்ளி விவரம்
    X

    பட்லர் போல்டான காட்சி

    மோசமோ மோசம்...! படுதோல்வியடைந்த இங்கிலாந்து குறித்து ஒரு புள்ளி விவரம்

    • 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டு மூலம் ஆட்டம் இழந்தனர்
    • தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம்

    லக்னோவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா முதலில் 229 ரன்கள் சேர்த்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து பல்வேறு மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை பார்ப்போம்.

    1. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முறையாக இங்கிலாந்து அணி (நடப்பு சாம்பியன்) தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1992-ல் 4 முறை தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

    2. இங்கிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் 129, 156 மற்றும் 170 ஆகிய ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் இதுபோன்று தொடர்ந்து மூன்று முறை இங்கிலாந்து 200 ரன்களுக்கு முன்னதாக ஆல்அவுட் ஆனது இல்லை.

    3. 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டானார்கள். இது ஒருநாள் போட்டியில் 3-வது சம்பவம் ஆகும். இதற்கு முன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டுள்ளன.

    Next Story
    ×