search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC 2023"

    • தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.

    அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.

    முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்.
    • சில குறும்புக்கார ரசிகர்கள் "விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்" என்றெல்லாம் "கமெண்ட்" செய்து வருகிறார்கள்.

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.

    அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

    இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர். ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே பின்னர் அமைதியாகி போனார் என்பதும், பின்னர் அவர் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது.
    • இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மும்பையில் நடந்த அரையிறுதி போட்டியை நேரில் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை திரும்பினார்.

    அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம். 100 சதவீதம் உலகக்கோப்பை நமதே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி
    • இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற அணிகள் 4 வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஏறக்குறைய கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன.

    நேற்று பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிகளில் வங்காளதேசம் தோல்வியடைந்தது. இதன்மூலம் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி வருகிற 6-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவால் வங்காளதேசத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தோல்வியடைந்தால், அந்த அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. 4-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 8-ந்தேதி நெதர்லாந்தையும், 11-ந்தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு வெற்றிகள் பெற்றிருக்கும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வருகிற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் முடிவைப் பொறுத்து ஒருவேளை அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். அது மிகவும் கடினம்.

    இன்று தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஏற்கனவே ஐந்து வெற்றிகளை பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஒருவேளை தோல்வியடைந்தால் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்தியா 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் பெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்ற 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் தலா இரண்டு வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இலங்கை 7-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    • 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும்.
    • வங்காளதேச அணிக்கு உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது.

    கொல்கத்தா:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும்.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், சாத் ஷகீல், இமாம் உல்-ஹக்கும், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், உஸ்மா மிர் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியில் பந்து வீச்சு எடுபடும் ஆட்டத்தில், பேட்டிங் கைகொடுப்பதில்லை. பேட்டிங்கில் அசத்தும்போது, பந்து வீச்சு சொதப்புகிறது. இரண்டும் ஒருசேர நன்றாக அமையாததே அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விகளை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்பி அரையிறுதி வாய்ப்பில் ஒட்டி கொண்டிருக்க ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    வங்காளதேச அணிக்கும் இந்த உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்காளதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்தது. அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் 87 ரன் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை அடியோடு இழந்தது. அந்த அணிக்கு எதிராக 230 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேம் 142 ரன்னில் அடங்கிப் போனது. டாப்-6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    இந்த தோல்விக்கு பிறகு வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேசுகையில், 'இது எங்களுக்கு மோசமான உலகக் கோப்பை போட்டி என்று சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லலாம். இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினம். ஆனால் இதுபோன்று கிரிக்கெட்டில் நடக்கும்' என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்டதால் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் வங்காளதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். மேலும் புள்ளி பட்டியலில் டாப்-7 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

    • இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா அதிக ரன்ரேட்டை பெற்றுள்ளது
    • நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.

    நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும்.

    நியூசிலாந்து 6 போட்டியில் 4-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6-ல் நான்கில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன்ரேட் குறைவால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின் வரிசையை பெற்றுள்ளது.

    இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    • 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டு மூலம் ஆட்டம் இழந்தனர்
    • தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம்

    லக்னோவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா முதலில் 229 ரன்கள் சேர்த்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து பல்வேறு மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை பார்ப்போம்.

    1. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முறையாக இங்கிலாந்து அணி (நடப்பு சாம்பியன்) தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1992-ல் 4 முறை தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

    2. இங்கிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் 129, 156 மற்றும் 170 ஆகிய ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் இதுபோன்று தொடர்ந்து மூன்று முறை இங்கிலாந்து 200 ரன்களுக்கு முன்னதாக ஆல்அவுட் ஆனது இல்லை.

    3. 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டானார்கள். இது ஒருநாள் போட்டியில் 3-வது சம்பவம் ஆகும். இதற்கு முன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டுள்ளன.

    • இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள்.
    • ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    லக்னோ:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் இந்தியா தனது முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கும் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் சிரமமின்றி இலக்கை விரட்டிப்பிடித்தது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (354 ரன்கள்), ரோகித் சர்மா (311 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும், பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் ஆடமுடியாது.

    நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி (வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வி (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம்) கண்டுள்ள இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளுக்குரிய முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே சிறிய வாய்ப்பு கிட்டும்.

    இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹாரி புரூக் ஆகியோரின் பேட்டிங் ஏமாற்றம் அளித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து ஒரு அணியாக ஒருங்கிணைந்து ஜொலிக்க முடியாததால் சறுக்கலை சந்தித்து வருகிறது.

    இந்திய அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி நெருக்கடியின்றி செயல்பட்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 57-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4-ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

    • பாகிஸ்தான் 46.4 ஓவரில் 270 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது
    • தென்ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

    சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி குறித்த தகவல்கள்:-

    1. உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 7-வது போட்டியாக இது அமைந்தது.

    2. பாகிஸ்தான் அணியை 1999 உலகக் கோப்பைக்குப்பின் (ஒருநாள் மற்றும் டி20) தென்ஆப்பிரிக்கா முதன்முறையாக வென்றுள்ளது.

    3. உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்கா 2-வது அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன் 2011-ல் இந்தியாவுக்கு எதிராக 297 ரன்களை சேஸிங் செய்துள்ளது. தற்போது 271 ரன்னை எட்டியுள்ளது. 1999-ல் இந்தியாவுக்கு எதிராக 254 ரன்கள் சேஸிங் செய்துள்ளது.

    4. பாகிஸ்தான் 270 ரன்களுக்கு மேல் அடித்து 1975-ல் இருந்து 2019 வரை 14 போட்டிகளில் ஒருமுறைதான் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 3 முறை 270 ரன்களுக்கு மேல் அடித்து, 2 முறை தோல்வியை சந்தித்துள்ளது.

    5. இந்த போட்டியில் 18 பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் அவுட்டானார்கள். இதன்மூலம் உலகக் கோப்பையில் கேட்ச் மூலம் அதிக பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த போட்டியாக இது அமைந்துள்ளது.

    6. சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்கு போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி வாகை சூடின.

    • 3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 21 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா போராடியது
    • ஷம்ஸி- மகாராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்துக் கொடுத்தது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலகக் கோப்பையில் கடைசி வரை மிகவும் த்ரில் ஆக சென்ற போட்டிகளில் இதுதான் முதன்மையான போட்டி என்றால் மிகையாகாது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 270 ரன்கள் குவித்தது. சென்னை ஆடுகளத்தில் 270 ரன்களை சேஸ் செய்ய கடினம் என்பதால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

    ஆனால், தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் டெம்பா பவுமா 27 பந்தில் 28 ரன்கள், டி காக் 14 பந்தில் 24 ரன்கள் அடிக்க 9.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் மார்கிராம் அணியை வழி நடத்திச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடிப்பதுடன் அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 91 ரன்கள் எடுத்த நிலையில் 41-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுதான் இருந்தது. ஓவர்கள் அதிகமாக இருந்ததால் தட்டி தட்டி ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் 260 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் ஒரு விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்ஸி, மகாராஜ் ஆகியோர் களத்தில் நின்றனர். 46-வது ஓவரை ராஃப் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது லெக்சைடு ஷம்ஸியை உரசிக் கொண்டு பந்து சென்றது. விக்கெட் கீப்பர் பந்தை பிடித்ததும் அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் வைடு என அறிவித்தார். பாகிஸ்தான் மேல்முறையீடு (Review) செய்ய வில்லை. ரீபிளேயில் வைடு இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு ரன் கிடைத்தது.

    இதே ஓவரின் கடைசி பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது பந்து காலில் பட்டதும், நடுவரிடம் அப்பீல் கேட்டனர். அவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் மேல்முறையீடு (Review) செய்தனர். அப்போது பந்து லெக் ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. ஆனால் நடுவர் முடிவு என 3-வது நடுவர் அறிவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.

    அவுட்டாவதில் இருந்து ஷம்ஸி தப்பித்தார். தென்ஆப்பிரிக்காவும் தோல்வியில் இருந்து தப்பியது.

    அடுத்த ஓவரை இருவரும் சமாளித்து 3 ரன்கள் சேர்த்தனர். 47-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் வீசினார். நவாஸ் லைக்சைடு பந்து வீச, மகாராஜ் சிறப்பாக விளையாடி பந்தை பவுண்டரிக்கு விரட்ட தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த காலங்களில் மழை போன்ற காரணங்களால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி பலமுறை பறிபோய் உள்ளது. இதனால் அந்த அணியை அதிர்ஷ்டம் இல்லாத அணி என்பார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் அதிர்ஷ்டம் கைக்கொடுத்ததால், தென்ஆப்பிரிக்கா வெற்றியை ருசித்தது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடமும் பிடித்தது.

    • பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார்
    • தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா மீண்டும் இடம் பிடித்துள்ளார்

    உலகக் கோப்பையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற பாபர் அசாம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியை அணுகுவோம். அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது" என்றார்.

    பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது.
    • சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.

    'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 

    பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.

    பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.

    சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம்.

    யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

    பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.

    ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.

    ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×