என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan Team"
- பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார்.
- ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்து உள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார். அப்ரிடியும் இந்த டெஸ்டில் ஆடி வருகிறார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் ஆட்டத்திலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி கேப்டனாக செயல்படுவார்.
இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானை அவர் வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை அப்ரிடி கைப்பற்றி உள்ளார்.
- பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
- பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.
பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.
- ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
- இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.
பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.
- நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.
2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
+0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.
- ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது.
- இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
இந்நிலையில் இந்திய அணி ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
- நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
- பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.
கராச்சி:
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.
இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.
இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:
அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.
அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.
எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.
ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.
ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.
- 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.
என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.
இவ்வாறு மாலிக் கூறினார்.
- புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒருங்கிணைந்த பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) பாபர் ஆசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார்.
ஏற்கனவே டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமுக்கு அடுத்தப் படியாக பொறுப்பை ஏற்ற ஷான் மசூத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 5 டெஸ்டில் அவரது தலைமையிலான அணி தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் மட்டுமே அதற்கான வாய்ப்பில் உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரிஸ்வானை தவிர அனைவரையும் முயற்சி செய்து விட்டது. இதனால் அவரைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும், மேல்மட்ட நிர்வாகத்தினருக்கும் ரிஸ்வான் மீது திருப்தி இல்லை. ஆனாலும் அவரை விட்டால் வேறு நபர் இல்லை. ரிஸ்வானை தேர்வு செய்யவே தேர்வுக் குழுவினர் கட்டாயப்படுத்தப்படுவர்.
இன்னொரு இளம் வீரரைத் தேர்வு செய்தால் பாபர் ஆசமுக்கு ஏற்பட்டது போல் தான் இருக்கும். எனவே மூத்த வீரர் ஒருவரை கேப்டனாக்கி அவர் தலைமையில் இளம் வீரர் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை 3 வடிவங்களுக்குமே ரிஸ்வானைக் கேப்டனாக்கினால் நல்லது என்றுதான் நினைக்கிறேன்.
கேப்டன் பதவியில் ஏற்பட்ட மாற்றங்கள் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய தோல்விகளில் பிரதி பலித்தது. இளம் வீரர்கள் கேப்டனாக்கப்பட்டு பிறகு நீக்கப்படுகின்றனர். இதனால் அணியில் பிளவுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு முடாசர் நாசர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதால் அதற்குள் ஒரு நல்ல ஆக்ரோஷமான, கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருங்கிணைந்த பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.
கராச்சி:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுத் சஹீல் 8 ரன்னிலும் பாபர் அசாம் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ரிஸ்வான் - சல்மான் ஆகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தையப் தாஹிர் 38, ஃபஹீம் அஷ்ரஃப் 22, நசீம் ஷா 19 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு.
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் பல்வேறு தடைகளை கடந்து இந்த தொடரை நடத்த இருக்கிறது.
முதலில் இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் இருந்து தொடர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், நாங்கள்தான் தொடரை நடத்துவோம் என பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை சீரமைக்கும் பணி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடைய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. அந்த தடையையும் கடந்து வந்துள்ளது.
லாகூர் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா உடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தியது.
இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி பாகிஸ்தான் தொடக்க போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை பல வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் பார்வையிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதால், பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அத்துடன் இந்திய அணிக்கெதிராக கோபமாக உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு கடுமையாக தகவலை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடியும் வரை இந்திய அணி வீரர்கள் உடனான நட்பை புறந்தள்ளி வைக்கவும். மேலும், விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை கட்டி பிடிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும், இந்த ஆட்டம் ஒரு தலைபட்சமாக இருக்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்தியா மிகவும் பலமான அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி தழுவி 3 நாடுகள் போட்டி தொடரை இழந்தது.
மேலும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதில் தெளிவாக இந்திய அணியே மேலோங்கி இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிய பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மை தான். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை. கேப்டன் பதவியில் ரிஸ்வான் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்.
எனவே எல்லா வகையிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட போட்டியாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.






