என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"
- இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.
- பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் 'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 127 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா இலக்கை 15.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபேவும் பலம் சேர்க்கிறார்கள்.
ஓமனுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 15-வது ஓவரில் ஹமாத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இந்திய அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் தெரிவித்தார். இந்த தொடரில் இதுவரை 3 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அக்ஷர் பட்டேல் ஆட முடியாமல் போனால் அணிக்கு இழப்பாகும்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி (ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இந்தியாவுக்கு எதிராக) தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் பஹர் ஜமான், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், சகிப்சதா பர்ஹான், பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த அணியின் மிடில் வரிசை தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக 'டாஸ்' போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. இந்த சம்பவம் ஆட்டம் முடிந்ததும் சர்ச்சையாக வெடித்தது. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.
கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சனை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பரம எதிரிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறும் இந்த ஆட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழலில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணாஅல்லது அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. ஒருதலைபட்சமாக அமைந்த அந்த ஆட்டத்தில் 57 ரன்னில் அமீரகத்தை சுருட்டிய இந்திய அணி இலக்கை வெறும் 4.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிவேக சேசிங் இதுவாகும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தி மிரட்டினர்.
அட்டகாசமான வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கும் இந்திய அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் 'நம்பர் ஒன்' வீரர் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. ஆல்-ரவுண்டர்களாக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அசத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி வலுசேர்க்கிறார்கள்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த கையோடு களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் சல்மான் ஆஹா, விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக முகமது நவாஸ், சைம் அயூப் ஜொலிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் நியூயார்க்கில் சந்தித்தன. அதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதே போல் ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தெறிக்க விட்டது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
கடந்த கால வரலாறுகள் எப்படி இருந்தாலும் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட நாளில் நெருக்கடியை திறம்பட கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதால் சுழலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் சைம் அயூப் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான்- முகமது ஹாரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். குறிப்பாக ஹாரிஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய சாஹிப்சாதா 29 பந்தில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஹாரிஸ் 66 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து வந்த கேப்டன் சல்மான் ஆகா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த நவாஸ் 9 ரன்னில் வெளியேறினார்.
அந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் பக்கர் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ் 10 பந்தில் 19 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதிவரை போராடிய பக்கர் ஜமான் 16 பந்தில் 23 ரன்களுடம் களத்தில் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகள் உள்ளன.
- இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
வரும் 28-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.
இதன் பின் பேட்டிங் இறங்கிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. இதனால் முதல் நாள் போட்டியில் சீனாவின் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.
வரும் நாட்களில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. டி20 வடிவத்தில் இந்த தொடர் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் டி20 வடிவில் நடைபெற்றுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். ஆசியக் கோப்பை தொடர் நாளை துபாயில் தொடங்க உள்ள நிலையில், ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்த தொடரில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
- இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது.
- வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடர் 20 ஓவர் போட்டி முறையில் நடக்கிறது.
இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.
இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி 4-ந்தேதி துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி புறப்பட்டு செல்வார்கள்.
ஆனால் இந்த முறை சில வீரர்கள் மட்டும் துபாய்க்கு புறப்படுவார்கள். மற்ற வீரர்கள் அவர்கள் இடங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வருவார்கள். வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனைத்து வீரர்களும் 4-ந்தேதி மாலைக்குள் துபாய்க்கு வருவார்கள். முதல் வலைப்பயிற்சி 5-ந் தேதி ஐ.சி.சி அகாடமியில் நடைபெறும். பயண வசதியைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அந்தந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலர் மும்பையில் இருந்து பயணம் செய்வார்கள்.
மற்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பின்னர் துபாய்க்கு செல்ல சொல்வது அர்த்தமற்றது. துபாய் என்பது மற்ற சர்வதேச விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய கால பயணமாகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
- 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
- எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.
இஸ்லாமாபாத்:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.
இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
- பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
பக்ரைன்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதுவரை 15 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இந்தியா அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.
2016-ம் ஆண்டில் இருந்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என மாறி மாறி ஆசிய கோப்பை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்தக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்யும்ம். பாகிஸ்தானில் போட்டி நடக்குமா? அல்லது பொதுவான இடத்துக்கு மாற்றப்படுமா? என்று தெரிய வரும்.
சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்திய கத்தார் ஆசிய கோப்பை போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.
பஹ்ரைன்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.
சென்னை:
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.
இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






