என் மலர்

    நீங்கள் தேடியது "pakistan cricket board"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.

    இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.

    இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.

    அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இங்கிலாந்து உலக கோப்பைக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய தடையை விதித்துள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.

    கவனச்சிதறலே இதற்கு காரணம் என கணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தடையை வீரர்களுக்கு விதித்துள்ளது.  வீரர்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்காது எனவும் கூறியுள்ளது.

    கடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பதவிக்காலத்தில் அதிக பணத்தை செலவழித்ததாக ஆடிட்டிங் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு பாயும் என நஜய் சேதி குறிப்பிட்டுள்ளார். #PCB #NajamSethi
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. இவரது காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். இந்தியாவிற்கு வந்து பிசிசிஐ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இலங்கையில் நடத்த முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் இந்தியா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி இந்தியா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஐசிசி-யில் முறையிட்டார்.

    இந்நிலையில்தான் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாகிஸ்தானில் அமைந்தது. இதனால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எஹ்சன் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆடிட்டிங் குழு, சம்பளம் தொடர்பாக சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் நஜம் சேதி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஜம் சேதி, மன்னிப்பு கேட்காவிடில் கிரிக்கெட் வாரியம் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை குறிவைக்கிறார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. என்னுடைய வக்கீல் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு என்னை அவமானம் செய்ய முயன்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உள்ளூர் தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு நான்கு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. #PCB
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமது ஷேசாத் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அவருக்கு பல்வேறு சுழற்சி முறையில் செய்யப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டை முகமது ஷேசாத் மறுத்தார். என்றாலும் கடந்த ஜூலை 10-ந்தேதியில் இருந்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில் நான்கு மாதம் அவருக்கு தடைவிதித்துள்ளது. இதனால் வரும் நவம்பர் 10-ந்தேதி வரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. மேலும், அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குறித்து  விழிப்புணர்வு பாடங்கள் எடுக்கப்படும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB
    பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில், பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.



    இதனால் பீல்டிங் கோச்சரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ பீல்டிங் கோச்சராக நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியின் கோச்சராக செயல்படுவார்.

    கிரான்ட் பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தை லீவ் செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர் விலை பேசினார்கள் என உமர் அக்மல் கூறியுள்ளார். #UmarAkmal
    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

    மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.



    உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

    இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×