search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan cricket board"

    • டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்தது.
    • சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு மொஹ்சின் நக்வி கூறினார்.

    • ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது.
    • 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முதல்தான் நகரில் தொடங்கியது.

    இந்திய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    6 லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. 3 போட்டிகள் இலங்கையில் நடந்தது. சூப்பர்-4 சுற்றின் 6 போட்டிகளில் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நேற்று நடந்தது. சூப்பர்-4 சுற்றின் எஞ்சிய 5 ஆட்டங்களும், இறுதிப்போட்டியும் இலங்கையில் உள்ள கொழும்பில் நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது. 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்தியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) தெரிவித்துள்ளது.

    இதற்கு இழப்பீடு கேட்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.

    இதுகுறித்து பி.சி.பி. அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஸ்ரப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் ஜெய்ஷாவுக்கு இழப்பீடு கோரிக்கையை கோடிட்டு முறைப்படி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏ.சி.சி.யின் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இடங்களை மாற்றுவதற்கான கடைசி நிமிட முடிவுகளை எடுத்ததற்கு யார் பொறுப்பு என்று அவர் தனது கடிததத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முக்கிய முடிவுகளில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எவ்வாறு பதில் அளிக்க போகிறது மற்றும் இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

    • இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது.
    • இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியின் பரிந்துரைப்படி இந்த போட்டி தற்போது இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.

    ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது. எனக்கும் இது பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானிடம் இருப்பதால் போட்டி முழுவதையும் பாகிஸ்தானிலேயே நடத்தும் வகையில் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அதுவும் இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    ஆனால் ஆசிய கோப்பை போட்டி குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் இனி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அதற்கு இடையூறு செய்ய மாட்டேன்' என்றார்.

    • இவ்விரு அணிகள் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.
    • இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை.

    மும்பை:

    இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007-ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி , நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது.

    இந்த நிலையில் இந்த செய்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ ) தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை. பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பிசிசிஐ தரப்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.

    இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.

    இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.

    அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து உலக கோப்பைக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய தடையை விதித்துள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.

    கவனச்சிதறலே இதற்கு காரணம் என கணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தடையை வீரர்களுக்கு விதித்துள்ளது.  வீரர்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்காது எனவும் கூறியுள்ளது.

    கடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    பதவிக்காலத்தில் அதிக பணத்தை செலவழித்ததாக ஆடிட்டிங் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு பாயும் என நஜய் சேதி குறிப்பிட்டுள்ளார். #PCB #NajamSethi
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. இவரது காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். இந்தியாவிற்கு வந்து பிசிசிஐ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இலங்கையில் நடத்த முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் இந்தியா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி இந்தியா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஐசிசி-யில் முறையிட்டார்.

    இந்நிலையில்தான் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாகிஸ்தானில் அமைந்தது. இதனால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எஹ்சன் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆடிட்டிங் குழு, சம்பளம் தொடர்பாக சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் நஜம் சேதி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஜம் சேதி, மன்னிப்பு கேட்காவிடில் கிரிக்கெட் வாரியம் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை குறிவைக்கிறார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. என்னுடைய வக்கீல் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு என்னை அவமானம் செய்ய முயன்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார்.
    உள்ளூர் தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு நான்கு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. #PCB
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமது ஷேசாத் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அவருக்கு பல்வேறு சுழற்சி முறையில் செய்யப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டை முகமது ஷேசாத் மறுத்தார். என்றாலும் கடந்த ஜூலை 10-ந்தேதியில் இருந்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில் நான்கு மாதம் அவருக்கு தடைவிதித்துள்ளது. இதனால் வரும் நவம்பர் 10-ந்தேதி வரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. மேலும், அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குறித்து  விழிப்புணர்வு பாடங்கள் எடுக்கப்படும்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB
    பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில், பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.



    இதனால் பீல்டிங் கோச்சரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ பீல்டிங் கோச்சராக நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியின் கோச்சராக செயல்படுவார்.

    கிரான்ட் பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தை லீவ் செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர் விலை பேசினார்கள் என உமர் அக்மல் கூறியுள்ளார். #UmarAkmal
    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

    மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.



    உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

    இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.
    ×