என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்"
- அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
- அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள்.
- இதனால் முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
லாகூர்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்கு பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17-ந்தேதி எதிர்கொள்கிறது.
- 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
- மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
- பஹல்காம் குறித்து பேசியதற்காக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
- அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.
லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.
இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஃபக்கர் ஜமான் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
- கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் சர்ச்சையானது.
துபாய்:
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின் நேற்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் 3-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசினார். அந்த பந்தை ஃபக்கர் ஜமான் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 'கேட்ச்' பிடித்தார். பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தில், கள நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர். அப்போது ஃபக்கர் ஜமான் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்தார்.
தொலைக்காட்சி நடுவர் அந்த 'கேட்ச்'சை ஆய்வு செய்தார். இறுதியில், ஃபக்கர் ஜமானுக்கு அவுட் என்று தீர்ப்பளித்தார். இந்த முடிவு, ஃபக்கர் ஜமானை மட்டுமல்லாது, பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களிலும் இந்தத் தீர்ப்பு குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில் கள நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொலைக்காட்சி நடுவர் (TV Umpire) தவறான தீர்ப்பை வழங்கியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.
இந்தச் சர்ச்சைக்குரிய தீர்ப்பு போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் தரப்பு நம்புவதால், தற்போது விஷயம் ஐசிசி-யின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவரை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது.
- இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பை பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் நயீம் கிலானி வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் பயன்பாடு குறித்தும் ஐ.சி.சி.க்கு தெரிவிக்கப்படாத நிலையில், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியதாக ஐ.சி.சி.குற்றம்சாட்டியது.
இதற்கிடையே ஆண்டி பைகிராப்ட், கேப்டன் சல்மான் ஆகா, மேலாளர் நவீத் அக்ரம் சீமா இடையேயான சந்திப்பின் போது தங்களின் ஊடக மேலாளா் உடன் இருந்ததும், அதை வீடியோ பதிவு செய்ததும் விதிமீறல் இல்லை என்று பாகிஸ்தான் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது ஐ.சி.சி.யால் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டதே என்றும், ஊடக மேலாளா் தங்கள் அணியின் ஒரு அங்கமே என்றும் தெரிவித்துள்ளது.
- டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை.
- போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்ளவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமாருடன் கைக் குலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் ஆண்டி பைகிராஃப்ட் அறிவுறுத்தியதாக PCB குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- அசார், 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
- 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அந்த அணியில் முக்கிய வீரராக இவர் இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் மோசமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அந்த அணியில் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாறி கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்கள் கேரி கிரிஸ்டன், ஜேஸன் கில்லெஸ்ப்பி ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இருவரும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் 8 மாதங்களிலே ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார்.
மேலும், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்றவர். 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அசார் மஹ்மூத் அந்த அணியில் முக்கிய வீரராக இருந்தார்.
இவர் 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக கார்பின் போஷ் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
- கார்பின் போஷ்கை ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனானது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் கார்பின் போஷ்கின் இந்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் பங்கேற்பதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த பிஎஸ்எல் தொடரில் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்பதையும் பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னுடைய முடிவின் காரணமாக கார்பின் போஷ் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது.
- ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
இஸ்லாமாபாத்:
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையைத் தாண்டி அதிக செலவு செய்யப்பட்டது.
சுமார் 869 கோடி ரூபாயை இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவிட்டது. இவ்வளவு பணத்தை வாரி இறைத்த நிலையில், இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு.
இந்த தொடரை நடத்துவதற்கான கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனை வருவாய் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 52 கோடி மட்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 739 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது யாரும் எதிர்பாராத மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
மேலும், போட்டிகளில் விளையாடாத மாற்று வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சம்பளத்தில் இனி 12.50 சதவீதம் மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
மேலும், இனி பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது. அவர்கள் சாதாரண விடுதிகளில் தான் இனி தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், சர்வதேச தரத்தில் மைதானங்களைத் தயார் செய்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை மேலும் பலவீனமானதாக மாற்றி இருக்கிறது பாகிஸ்தான்.
- முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
- அது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.






