என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட்"

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 178 ரன்கள் குவித்தது.
    • பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில்லில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் சைம் ஆயுப் 38 பந்தில் 57 ரன்கள் விளாசினார். ஃபஹர் ஜமான் 28 ரன்களும், ஹசன் நவாஸ் 24 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஜீவல் ஆண்ட்ரூ தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்த விக்கெட்டுகளை இழந்தது.

    ஜேசன் ஹோல்டர் 12 பந்தில் 30 ரன்களும், ஷமர் ஜோசப் 12 பந்தில் 21 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.

    • இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.

    எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    • பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர்.
    • விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் நடந்த மைனர் 'லீக்' கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் பெறாமல் அவர்கள் அமெரிக்க போட்டியில் விளையாடி உள்ளனர்.

    இதையொட்டி அவர்களிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
    • இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

    உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.

    பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

    வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    • பாகிஸ்தான் அணியில் 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • பஹர் சமான் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில் அப்ரார் அகமது மட்டுமே பிரத்யேக ஸ்பின்னராக இடம் பிடித்துள்ளார். 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர். அப்ரார் அகமது 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி பிப்ரவரி 11-ந்தேதி வரைக்கும் அணியில் மாற்றம் செய்ய முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ஆல்ரவுண்டர்கள் குஷ்தில் ஷா, பஹீம் அஷ்ரப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பஹர் சமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார்.

    பஹர் சமான் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடினார். குஷ்தில் ஷா கடைசியாக 2022-ல் விளையாடினார். பஹீம் அஷ்ரப் 2023-ம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.

    இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுபியன் முகீம், பேட்ஸ்மேன் இர்பான் கான் நியாசி, தொடக்க பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    எங்கள் நாட்டில் தொடர் நடைபெற இருப்பதால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், சர்வதேச போட்டிகளில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினோம் என ஷபிக் தெரிவித்துள்ளார்.

    பஹர் சமான் உடன் பாபர் அசாம் அல்லது ஷகீல் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    ஹரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. முகமது ரிஸ்வான், 2. சல்மான அலி ஆகா (துணைக்கேப்டன்), 3. பாபர் அசாம், 4. பஹர் சமான், 5. ஷகீல், 6. கம்ரான் குலாம், 7. குஷ்தில் ஷா, 8. தய்யப் தாஹிர், 9. உஸ்மான் கான், 10. பஹீம் அஷ்ரப், 11. ஷாஹீன் ஷா அப்ரிடி, 12. நசீம் ஷா, 13. முகமது ஹஸ்னைன், 14. அப்ரார் அகமது.

    பிப்ரவரி 8 முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு போட்டியில் இந்த அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ந்தேதி கராச்சி மைதானத்தில் தொடங்குகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
    • பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    கராச்சி:

    சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

    நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.

    உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

    கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.

    நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதால் மனைவி மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலம் ராம்நகரை சேர்ந்தவர் இஷான்மியா. இவரது மனைவி ரபியா ‌ஷம்சி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இடையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரபியா ‌ஷம்சி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் தொடர்ந்து இருந்தார்.

    கடந்த மாதம் 24-ந்தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.

    அப்போது ரபியா ‌ஷம்சியும் மற்றும் அவரது தாய் வீட்டு குடும்பத்தினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த காட்சிகளை படம் பிடித்து வாட்ஸ்-அப், ஸ்டேட்டசிலும் ரபியா ‌ஷம்சி வெளியிட்டார். இது கணவர் இஷான் மியா கவனத்துக்கு வந்தது. அவர் இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தார்.

    அதையடுத்து ரபியா ‌ஷம்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் தகவல் தொடர்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு அங்கித் மிட்டல் கூறும்போது, ‘‘அவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதோடு, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களை எழுப்பி தவறாக செயல்பட்டதால், அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்ததுபோல், பாகிஸ்தானும் முன்னாள் வீரர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இளையோர் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது. ராகுல் டிராவிட் தலைமையில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நியூசிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது.

    ஏராளமான வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட முன்னேற்றம் அடைந்துள்ளனர். ரஞ்சி டிராபியில் அசத்துகிறார்கள். டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அசத்தி வருகிறார்கள். இதற்கு ராகுல் டிராவிட்டுதான் முக்கிய காரணம் என்று கூறி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், ரோட்னி மார்ஷ் போன்றோரை பயிற்சியாளராக நியமித்து இருந்தது.

    பாகிஸ்தானின் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யூனிஸ் கான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும்போது, ‘‘இளம் வீரர்களுக்கான அணிக்கு பயிற்சியாளராக தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் இளையோர் அணிக்கு முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க யோசித்து வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடும் என பிசிபி நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #PCB
    இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். 6 வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஆஸ்திரேலியா 1998-ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் சென்று  விளையாடவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் ஒரு பகுதி ஆட்டமாவது பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு நாங்கள் அதிக பாதுகாப்பு வழங்க உறுதி செய்வோம். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பாகிஸ்தானில் தொடர்ந்து சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்காக மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடக்க வடிவத்திலேயே இருக்கிறது.

    நான் மற்ற போர்டுகளின் தலைவர்களிடம் உட்கார்ந்து, எங்களுடைய திட்டத்தில் எங்கே இடைவெளி உள்ளது? உங்களுக்கு தர்மசங்கடமாக உள்ள விஷயம் என்ன? நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாட நாங்கள் என்ன உறுதியளிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் குறித்து பேச வேண்டியது அவசியமானது’’ என்றார்.

    இலங்கை அணி 2017-ல் பாகிஸ்தான் சென்று ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்துக்கு எதிரான 3 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பரபரப்பாக ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

    துபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்கள் அள்ளினார்.



    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.



    3-வது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. முகமது ஹபீஸ், 2. இமாம்-உல்-ஹக், 3. அசார் அலி, 4. அசாத் அலி, 5. ஹரிஸ் சோஹைல், 6. பாபர் ஆசம், 7. சாத் அலி, 8. சர்பிராஸ் அகமது, 9. யாசிர் ஷா, 10, பிலால் ஆசிப், 11. முகமது அப்பாஸ், 12. ஹசன் அலி, 13. பஹீம் அஷ்ரப், 14. ஷஹீன் அப்ரிடி, 15. மிர் ஹம்சா.
    ×