என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shahid afridi"

    • விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது- மியான்டட்.
    • அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர்- அப்ரிடி.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஜாவித் மியான்டட் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விராட் கோலியை பாராட்டியுள்ளனர்.

    விராட் கோலி குறித்து மியான்டட் கூறியதாவது:-

    விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது. தான் மிகவும் நேசித்த விளையாட்டை திடீரென விட்டுச் செல்வது, கதையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. என் பார்வையில், அவர் 2027 இறுதி வரை எளிதாக விளையாடியிருக்கலாம். நிச்சயமாக, அவருக்கு ஒரு கடினமான சூழ்நிலை இருந்தது.

    இவ்வாறு மியான்தத் தெரிவித்துள்ளார்.

    ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-

    விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரியவர். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள், அவர்கள் விசேசமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர் முன்பு கோபக்காரராக இருந்தார்.

    சுனில் கவாஸ்கர் கூட ஒருமுறை அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, விராட் கோலி நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதிக மரியாதைக்கு தகுதியானவர்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம்.
    • சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ சரிபார்க்கப்பட்டது.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.

    வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.

    ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது. 

    • துபாயில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வை கேரள அமைப்பு நடத்தியது.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    பாகிஸ்தானில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

    பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி வந்தார்.

    இந்நிலையில், துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    கேரள கொச்சின் பல்கலைக்கழகத்தின் பி.டெக் முன்னாள் மாணவர்கள் அமைப்பு(CUBAA), முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்றை துபாயில் நடத்தியுள்ளது.

    இந்த விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இருவருக்கும் உற்சாக வரவேற்பளித்து மேடையில் பேச வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவிற்கு எதிராக பேசியவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது இந்தியாவை அவமதிக்கும் செயல், என சமூகவலைத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விளக்கமளித்துள்ள CUBAA அமைப்பு, "அன்று எங்கள் நிகழ்வு நடந்த இடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்வு நடைபெற்றது.

    எங்களின் நிகழ்வு முடியும் தருவாயில், அவர்கள் எங்களின் அழைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் வருகை தந்தனர். எங்கள் தரப்பில் இருந்து யாரும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை" என தெரிவித்துள்ளனர்.

    • இந்தியா தனது சொந்த மக்களை கொன்று பழியை எங்கள் மீது போடுகிறது.
    • தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் ஒரு ராணுவ வீரர் கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் அங்கே ஒரு பட்டாசு வெடித்தாலும், அதற்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவதா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அங்கே ஒரு பட்டாசு வெடித்தாலும், அவர்கள் அதற்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவார்கள். பஹல்காமில் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு எந்த ராணுவ வீரரும் வரவில்லை. இஸ்லாம் அமைதியை போதிக்கும் மதம். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. பாகிஸ்தான் எப்போதும் அமைதியைதான் விரும்புகிறது. நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்.

    ஆனால் இந்தியா தனது சொந்த மக்களை கொன்று பழியை எங்கள் மீது போடுகிறது. 8 லட்சம் இந்திய ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிற நிலையில், தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆனால் பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறார்கள்.

    தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், அவர்களின் ஊடகங்கள் பாலிவுட் சினிமா போல் மாறியது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுளின் பொருட்டு, எல்லாவற்றையும் சினிமா ஆக்காதீர்கள். நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர்கள் பேசும் விதத்தை நான் ரசித்தேன். தங்களைத் தாங்களே படித்தவர்கள் என்று சொல்லும் இந்தியர்கள் தங்களது சிந்தனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இதில் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய 2 வீரர்கள் உள்ளனர். அவர்கள் தூதர்களாகவும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நேரடியாக பாகிஸ்தானைக் குறை கூறுகிறார்கள்.

    என்று அப்ரிடி கூறினார்.

    • அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.

    பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.

    இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    • அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
    • ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கிரிக்கெட்டில் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.

    பாபர் ஆசமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவ போட்டிகளில் அவர் கேப்டன் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும் என்றார்.

    • திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.

    இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிடியும் இணைந்து கொண்டனர்.

    ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

    • பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
    • நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.

    இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.

    என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை. என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அப்ரிடி டாக்டரிடம் கூறியிருக்கிறார்.

    புதுடெல்லி

    பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது புகார், பாலியல் துஷ்பிரயோகம் என நீண்டு கொண்டே போகும்.

    பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து ஷாகித் அப்ரிடிதான் தன்னை காப்பாற்றினார் என கூறி உள்ளார்.

    நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-


    சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.

    இது ஒரு மெல்ல கொல்லும் விஷம். அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனது மூட்டுகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இந்த காரணத்திற்காக, நான் கிட்டத்தட்ட 6-7 ஆண்டுகள் அவதிப்பட்டேன். ஆனால் அப்போதும், 'தயவுசெய்து என்னை படுத்த படுக்கையாக்காதே' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அது ஒருபோதும் நடக்கவில்லை.

    நான் பலரை சந்தேகித்தேன். ஆனால் நான் எப்போது, என்ன சாப்பிட்டேன், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் விஷம் உடனடியாக செயல்படாது. அது பல ஆண்டுகளாக உங்களை மெல்லக்கொல்லும்.

    நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவ சிகிச்சைக்காக செலவானது. எனது சிகிச்சைக்கு கொஞ்சம் கூட காசு இல்லை. அப்போது எனது நிலையை அறிந்த ஷாகித் அப்ரிடி எனக்காக 40 லட்சம் வரை செலவு செய்தார். எனது டாக்டருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பி விடுவார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை. என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அவர் டாக்டரிடம் கூறியிருக்கிறார்.

    அண்ணன் அப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

    என கூறி உள்ளார்.

    இம்ரான் நசீர் பாகிஸ்தான் அணிக்காக 79 ஒருநாள் மற்றும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    • பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
    • கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    லாகூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

    இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
    • அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது சகோதரியின் மறைவு செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தனது பயண திட்டத்தை கூட நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் தனது சகோதரி பரிதாபமாக இறந்தார் என்ற செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். மேலும் தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.


    அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
    • சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

    ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.

    மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

    ×