search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shahid afridi"

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
    • மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மினி உலகக் கோப்பை தொடர் என்று அழைக்கப்படும் "சாம்பியன் டிராபி" முதன் முதலில் 1998-ம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார். அவருக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இங்கு கோலி விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளோம்.

    இவ்வாறு ஷாஹித் அப்ரிடி கூறினார்.

    • விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன்.
    • இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும். அமெரிக்க ரசிகர்களுக்கு இது சூப்பர் பவுல் (Super Bowl) போன்று இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாகித் அப்ரிடி கூறுகையில் "முதன்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் சூப்பர் பவுல் போன்றதாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும்.

    நான் எப்போதுமே இந்தியாவில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்புவேன். விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன். நான் இதுபேன்ற போட்டிகளில் விளையாடும்போது நான் ஏராளமான அன்பை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன். இரண்டு பக்க வீரர்களும் அதுபோன்று பரஸ்பர அன்பை பெற்றுள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம். இரண்டு அணிகளும் அதிக திறமைகளை கொண்டதுதான். அன்றைய நாளில் வீரர்கள் ஒன்றிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியம். இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றும் தொடர் முழுவதும் இது தேவை. நெருக்கடியை கையாளும் அணி முதல் இடத்தை பிடிக்க முடியும்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் தேசிய கால்பந்து லீக் தொடர் பிரபலம். இதன் இறுதிப் போட்டியை சூப்பர் பவுல் என அழைப்பாளர்கள். கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி இங்குள்ள மியாமி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    • பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
    • சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

    ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.

    மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

    • தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
    • அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது சகோதரியின் மறைவு செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தனது பயண திட்டத்தை கூட நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் தனது சகோதரி பரிதாபமாக இறந்தார் என்ற செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். மேலும் தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.


    அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
    • கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    லாகூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

    இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை. என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அப்ரிடி டாக்டரிடம் கூறியிருக்கிறார்.

    புதுடெல்லி

    பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது புகார், பாலியல் துஷ்பிரயோகம் என நீண்டு கொண்டே போகும்.

    பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து ஷாகித் அப்ரிடிதான் தன்னை காப்பாற்றினார் என கூறி உள்ளார்.

    நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-


    சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.

    இது ஒரு மெல்ல கொல்லும் விஷம். அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனது மூட்டுகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இந்த காரணத்திற்காக, நான் கிட்டத்தட்ட 6-7 ஆண்டுகள் அவதிப்பட்டேன். ஆனால் அப்போதும், 'தயவுசெய்து என்னை படுத்த படுக்கையாக்காதே' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அது ஒருபோதும் நடக்கவில்லை.

    நான் பலரை சந்தேகித்தேன். ஆனால் நான் எப்போது, என்ன சாப்பிட்டேன், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் விஷம் உடனடியாக செயல்படாது. அது பல ஆண்டுகளாக உங்களை மெல்லக்கொல்லும்.

    நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவ சிகிச்சைக்காக செலவானது. எனது சிகிச்சைக்கு கொஞ்சம் கூட காசு இல்லை. அப்போது எனது நிலையை அறிந்த ஷாகித் அப்ரிடி எனக்காக 40 லட்சம் வரை செலவு செய்தார். எனது டாக்டருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பி விடுவார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை. என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அவர் டாக்டரிடம் கூறியிருக்கிறார்.

    அண்ணன் அப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

    என கூறி உள்ளார்.

    இம்ரான் நசீர் பாகிஸ்தான் அணிக்காக 79 ஒருநாள் மற்றும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    • பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
    • நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.

    இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.

    என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.

    இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிடியும் இணைந்து கொண்டனர்.

    ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

    • அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
    • ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கிரிக்கெட்டில் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.

    பாபர் ஆசமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவ போட்டிகளில் அவர் கேப்டன் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும் என்றார்.

    • அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.

    பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.

    இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    • இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது.
    • ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை.

    டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.

    முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர்.முஹம்மது ரிஸ்வானின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .

    இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி கூறியதாவது:-

    நீங்கள் பந்து வீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

    ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

    ×