என் மலர்
நீங்கள் தேடியது "லெஜண்ட்ஸ் லீக்"
- தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, இந்த தொடரில் ஒரு ஓவரில் பௌலர் ஒருவர் 18 பந்துகளை வீசிய வினோத சம்பவம் நடந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 7.5 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஒரு ஓவரில் 18 பந்துகளை வீசினார். 8ஆவது ஓவரை வீசிய ஜான் ஹாஸ்டிங்ஸ், 12 வைடு பால், ஒரு நோ பால் உட்பட 18 பந்துகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரை அவர் முழுமையாக முடிக்கவில்லை. 5 பந்துகள் மட்டுமே அவர் வீசியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வைடு மூலமாகவே பாகிஸ்தான் அணியை அந்த ஓவரில் அவர் வெல்ல வைத்தார்.
- லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நாளை மோத இருந்தது.
லீட்ஸ்:
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
லீட்ஸ்:
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.
இந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை யூசப் பதான் சிக்சர் விளாசி முடித்து வைத்தார். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஓய்வு அறையில் இருந்த ஷிகர் தவான் நடனமாடி கொண்டாடினார். மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் யூசப் பதான் வெளியில் இருந்து போட்டியை ரசித்த சிறுவர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
- புள்ளிப்பட்டியலில் 4 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்தது.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம்.
- நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம்.
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டி தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சயித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தை புறக்கணிப்பதாக போட்டி அமைப்பு குழுவினருக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சல்மான் பட் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய கிரிக்கெட் அணி) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில் கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 - 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்.
என்று சல்மான் பட் கூறினார்.
- விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது.
- அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.
பர்மிங்காம்:
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.
முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும்.
இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்ளதான் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
- இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மும்பை:
இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் துவங்குகிறது.
லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
- கோனார்க் அணியும் 20 ஓவரில் 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
ஸ்ரீநகர்:
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், சதர்ன் சூப்பர் ஸ்டார் அணியும் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மசாகசா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 58 பந்தில் 83 ரன்கள் குவித்தார்.
கோனார்க் அணி சார்பில் முன்னாள் இலங்கை வீரர் தில்ஷன் முனாவீரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி களமிறங்கியது. முன்னாள் இந்திய வீரரான யூசுப் பதான் சூறாவளியாக சுழன்றடித்தார். அவர் 38 பந்தில் 85 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோனார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய கோனார்க் அணி ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 5 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மசாகசா ஆட்டநாயகன் விருதையும், மார்டின் குப்தில் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேபாளம் நாட்டில் நடைபெறும் நேபாள பிரீமியர் லீக் தொடரில் கர்னாலி யாக்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.






