என் மலர்
நீங்கள் தேடியது "final match"
- தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது .
- ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்தி ரேலியா)-ஜோர்னா கார்லேண்ட் (சீனதைபே) மோதினார்கள். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கிம்பெர்லி 6-7 (2-7), 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
3-வது செட்டில் ஒரு கட்டத்தில் கார்லேண்ட் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வாய்ப்பை அவர் தக்க வைக்க தவறிவிட்டார். 4 முறை மேட்ச் பாயிண்ட் வந்தும் அவர் தோல்வியை தழுவினார்.
நீண்ட நேரமாக போட்டி நடைபெற்றதால் கார் லேண்ட் மிகவும் சோர்வடைந்தார். மேலும் தசைப் பிடிப்பும் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மருத்துவ உதவியை பெற்றார். தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது . அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த போட்டி 3 மணி 24 நிமிட நேரம் நடைபெற்றது.
முன்னதாக நடந்த அரை இறுதி போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென்- கிம்பெர்லி பிரெல் மோதுகிறார்கள்.
இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரியா பாட்டியா- ருதுஜா போசலே ஜோடி 7-5, 0-6, 5-10 என்ற கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென்- அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனே சியா)ஜோடியிடம் தோற்றது.
இந்த ஜோடி இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டோம் கண்டர் (ஆஸ்திரேலியா)- மோனிகா (ருமேனியா) ஜோடியுடன் மோதுகிறது.
- தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
- 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் இருந்தது.
கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு ரசித்தனர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
- ரசிகர்கள் குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.






