என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இர்பான் பதான்"

    • ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.
    • ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.

    ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

    அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்னர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரோபோ சங்கர் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில், "ரோபோ சங்கரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

    • 2006 பாகிஸ்தான் தொடரின்போது ஒரே விமானத்தில் பயணம் செய்தோம்.
    • அப்போது அப்ரிடி என்னைப் பற்றி வெறுக்கத்தக்கும் வகையில் பேசினார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் களத்திற்குள் பயங்கரமாக மோதிக் கொள்வார்கள். அதிக அளவில் ஸ்லெட்ஜிங் நடைபெறும். இந்த ஸ்லெட்ஜிங் களத்திற்கும் வெளியிலும் சிலநேரம் நடைபெறும்.

    கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது அப்ரிடிக்கும், தனக்கும் இடையில் ஸ்லெட்ஜிங் நடந்ததை இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-

    2006ஆம் ஆண்டு தொடரின்போது இந்திய அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்களும் ஒரே விமானத்தில் கராச்சியில் இருந்து லாகூர் பயணம் செய்தோம். அப்போது, அப்ரிடி என் அருகே வந்து, அவரது கையை என் தலையில் வைத்து, மசாஜ் செய்வதுபோன்று முடியை பிசைந்தார். அத்துடன் என்னிடம், குழந்தாய்..! எப்படி இருக்கிறாய்? எனக் கேட்டார். அப்போது நான், நீங்கள் எப்போது என் தந்தையானீர்கள்? என்று கேட்டேன்.

    இந்த குழந்தைத்தனமாக பழக்கவழக்கம் அவருடையதுதான். அவர் என்னுடைய நண்பர் கிடையாது. அதன்பின், வெறுக்கத்தக்க சில வார்த்தைகள் என்னை பற்றிக் கூறினார். அவருடைய இருக்கை எனது இருக்கைக்கு வலது பக்கமாக இருந்தது.

    அப்துல் ரசாக் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார். என்ன வகையான இறைச்சிகள் இங்கே (பாகிஸ்தான்) கிடைக்கும் என அப்துல் ரசாக்கிடம் கேட்டேன். அதற்கு அவர், பலவகையான இறைச்சிகள் கிடைக்கும் என பதில் சொன்னார். நான் அவரிடம், நாய்க்கறி கிடைக்குமா? என்று கேட்டேன்.

    இதனால் ரசாக் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், பதான் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது நான் சிறிதும் தயங்காமல் அப்ரிடி நாய்க்கறி சாப்பிட்டுவிட்டார். அவர் நீண்ட காலமாக குறைத்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறினேன்.

    அதன்பின் அப்ரிடியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை. அவர் ஏதாவது சொல்லியிருந்தால் நான், பாருங்கள் மீண்டும் குறைத்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல்லியிருப்பேன். அதன்பின் விமானம் தரையிறங்கும் வரை அப்ரிடி அமைதியாக இருந்தார்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, வார்த்தைப் போரில் என்னை வெல்ல முடியாது என்று அவருக்கு புரிந்திருக்கும். அதன்பின் ஒருபோதும் அவர் என்னிடம் ஏதும் சொன்னதில்லை.

    இவ்வாறு இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.

    • சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
    • இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.

    இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.

    • முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை.
    • 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். அதில் முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.

    கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் இர்பான் பதான் தனது அணியில் வாய்ப்பு வழங்கிய நிலையில் அன்ஷூல் கம்போஜை அணியில் இருந்து நீக்கியுள்ளார்.

    மேற்கொண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜை தேர்வு செய்துள்ள நிலையில் அறிமுக வீரர் ஆர்ஷ்தீப் சிங் அல்லது பிரஷித் கிருஷ்ணா லெவனில் இடம்பிடிக்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.

    இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.

    • 4ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
    • தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால், பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும் என்கிறார் இர்பான் பதான்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் 2ஆவது போட்டியில் அவரை கட்டாயம் களம் இறக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தினர்.

    ஆனால் 2ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் பும்ரா விளையாடினார். அதில் இந்தியா தோல்வியடைந்தது.

    4ஆவது போட்டி வருகிற 23ஆம் தேதி ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஆனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும். இருந்தபோதிலும், பும்ரா களம் இறக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் 4ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-

    எல்லா அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச் சுமையை சார்ந்தது. அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? மற்ற ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை பொருத்தது. 3ஆவது போட்டிக்கும், 4ஆவது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.

    இது தொடரை தீர்மானிக்கும் போட்டி. காயம் இல்லையனெ்றால், அவர் கட்டாயம் விளையாட வேண்டும். ஐசிசி சாம்பியன்ஷிப்பில், இதுபோன்ற முக்கிய சூழ்நிலையில், மாற்றம் செய்வது அணி நிர்வாகம் அல்லது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்தது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பை கொடுக்கும்.

    இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன்.
    • அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பேட்ஸ்மேன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், 3-வது போட்டியில் சதமும் அடித்தார்.

    அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரன்களை குவித்து வரும் சுப்மன்கில்லை பலர் பாராட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்தார்.

    சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன். அவர் அனைத்து வடிவ வீரராக உருவாக முடியும் என்று அடிக்கடி கூறி வருகிறேன்.

    விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். அது போன்ற அதிக திறமை சுப்மன் கில்லிடம் இருக்கிறது. விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார்.

    அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சதத்தை அடித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் ஆறு சதங்களை அடித்து உள்ளார். சுப்மன் கில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் யாஷ் தயாள் 2-வது இடம் பிடித்துள்ளார்.
    • இன்றைய ஆட்டத்தை மறந்து விடுங்கள் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்த பரப்பரப்பான போட்டியில் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 48 (நாட் அவுட்) ரன்கள் குவித்தார்.

    கடைச் ஓவரை வீசிய யாஷ் தயாள் அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதற்கு முன்னதாக அவர் 3 ஓவர் வீசி 38 ரன்கள் கொடுத்திருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் யாஷ் தயாள் 2-வது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பசில் தம்பி இடம் பெற்றுள்ளார்.

    விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் கொடுத்த பவுலர்கள்:

    பசில் தம்பி - 70 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - ஆர்சிபி

    யாஷ் தயாள் - 69 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்) - கேகேஆர்

    இஷாந்த் சர்மா - 66 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - சென்னை சூப்பர் கிங்ஸ்

    முஜூப் உர் ரஹ்மான் - 66 ரன்கள் (கிங்ஸ் 11 பஞ்சாப்) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    உமேஷ் யாதவ் - 65 ரன்கள் டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி

    இந்நிலையில் யாஷ் தயாளிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    ஏய் யாஷ் தயாள் நண்பா, அடுத்த ஆட்டத்திற்கு செல்ல களத்தில் இருந்த நல்ல நாட்களை மறந்தது போல் இன்றைய ஆட்டத்தை மறந்து விடுங்கள். நீங்கள் வலுவாக இருந்தால், எல்லா விஷயங்களையும் மாற்ற முடியும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • விராட் கோலியின் முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது.
    • விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.

    ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் ஆடியதால் விராட் கோலி தான் இந்த போட்டியில் கேப்டன்சி செய்தார். இதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மிக அருமையாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி வேற லெவல் எனர்ஜியை அணிக்குள் கொண்டுவந்தார். எனர்ஜி மட்டுமல்லாது அவரது முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. 3-வது ஓவரிலேயே ஹசரங்காவை பந்துவீச வைத்தது மாஸ்டர்ஸ்ட்ரோக்.

    மேத்யூ ஷார்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார் என்பதை தெரிந்தே ஹசரங்காவை அழைத்துவந்தார். அதன்படி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதே ஆர்சிபி அணி வலுவாகிவிட்டது. விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.

    இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது.
    • அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும்.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

    கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்சை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அவர் 47 பந்தில் 100 ரன்களை குவித்தார்.

    கேமரூன் கிரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை. சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

    ஆனால் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு கிரீன் சரியான ஆளுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான கிரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்சின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

    என்று இர்பான் பதான் கூறினார்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை.
    • ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை.

    ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

    அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்.

    இவ்வாறு பதான் கூறினார்.

    ×