என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து"
- இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
- இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். இதே போல் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 119.4 ஓவர்கள் பந்து வீசி 14 விக்கெட் வீழ்த்தி இருக்கும் பும்ராவுக்கு, ஏற்கனவே முதுகில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அதிகமான போட்டிகளில் ஆடும் போது மீண்டும் முதுகில் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால் இந்த டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார். இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
நடப்பு தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறது. கேப்டன் சுப்மன் கில் (722 ரன்), லோகேஷ் ராகுல் (511 ரன்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்) ஆகியோர் ரன்வேட்டை நடத்தியுள்ளனர். முந்தைய டெஸ்டில் 311 ரன்கள் பின்தங்கி இருந்த போதிலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அற்புதமான சதத்தால் 143 ஓவர்கள் போராடி 'டிரா' செய்தது.
இந்த பயணத்துக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடிக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் முதல் 4 டெஸ்களிலும் ஆட்டத்தை 5-வது நாளுக்கு அதுவும் கடைசி பகுதி வரை இழுத்து சென்று தொடரையே பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்ததாக மாற்றி இருக்கிறது, நமது அணி. பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
தொடரை பறிகொடுக்காமல் 2-2 என்று சமன் செய்தாலே அது பெரிய சாதனையாக இருக்கும். 2021-22-ம் ஆண்டு தொடரையும் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் தான் செய்திருந்தது. எனவே இந்திய அணி, இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வெற்றியோடு நிறைவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 4-வது டெஸ்டில் வலது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். கடந்த இரு டெஸ்டிலும் ஆட்டநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் (304 ரன் மற்றும் 17 விக்கெட்) இல்லாதது நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவு தான். இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.
சில முன்னணி வீரர்கள் ஒதுங்கினாலும் இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சூப்பர் பார்மில் உள்ள ஜோ ரூட் (2 சதம் உள்பட 403 ரன்), பென் டக்கெட் (365 ரன்), விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (424 ரன்) தொடர்ந்து ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள்.
பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். 4-வது டெஸ்ட் முடிந்து அடுத்த 3 நாட்களில் 5-வது டெஸ்ட் தொடங்குகிறது. இது போன்ற 5 டெஸ்ட் தொடரில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகும். அதிக ஓவர்கள் பந்து வீசியிருக்கிறோம். நிறைய நேரம் களத்தில் செலவிட்டு இருக்கிறோம். அதனால் குறைவான இடைவெளியில் போட்டி தொடங்குவது இரு அணிக்குமே கடினமாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டியில் 8-9 நாள் இடைவெளி கிடைத்தது. அதற்கு பதிலாக ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 4-5 நாட்கள் இடைவெளி கொடுத்திருக்கலாம்' என்றார்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் அல்லது குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், அன்ஷூல் கம்போஜ், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.
- இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 669 ரன் குவித்தது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 311 ரன் கூடுதலாகும். ஜோ ரூட் (150 ரன்), பென் ஸ்டோக்ஸ் ( 141 ரன்) சதம் அடித்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்னு டனும், கேப்டன் சுப்மன் கில் 74 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும். புதிய பந்து எடுக்கும்போது இந்தியாவுக்கு கடும் சவால் இருக்கும். 80 ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்படும். இதனால் முதல் செசன் (மதிய உணவு, இடைவேளை வரை) மிகவும் முக்கியமானது.
இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் காயத்துடன் இருக்கும் ரிஷப்பண்ட் ஆடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் தெரிவித்துள்ளார்.
இது தொடர் பாக அவர் கூறியதாவது:-
2-வது இன்னிங்சிலும் ரிஷப்பண்ட் விளையாடுவார். முதல் ஓவரில் 2 விக்கெட் இழந்த பிறகு கேப்டன் சுப்மன் கில்லும், ராகுலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் விளையாடினார்கள். பந்து வீச்சுத் தன்மையை பொறுத்து பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினார்கள். 3-வது வரிசை குறித்து அணி பெரிதாக கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வலதுகாலில் எலும்பு முறிவு இருந்தபோதிலும் ரிஷப்பண்ட் 2-வது நாளில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். முதல் நாளில் பேட்டிங்கின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேறினார்.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
- 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி, விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், எக்லெஸ்டோன், டாமி பீமோன்ட் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். மொத்தத்தில், அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- பிரதான பவுலர்கள் ரேணுகா சிங், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர் காயத்தால் இடம் பெறவில்லை.
சவுத்தம்டன்:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக (3-2 என்ற கணக்கில்) வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சவுத்தம்டனில் இன்று நடக்கிறது.
இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்து ஒரு நாள் தொடரையும் வென்றால், செப்டம்பர் 30-ந்தேதி உள்ளூரில் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு (50 ஓவர்) தயாராவதற்கு ஊக்கமளிக்கும்.
முத்தரப்பு தொடரில் 276, 275, 337, 342 ரன்கள் வீதம் குவித்த இந்திய அணி அதே போன்று ரன்வேட்டை நடத்த ஆர்வம் காட்டுகிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் 300 ரன்களுக்கு மேல் எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதிக ரன்கள் எடுக்கும் போது, எதிரணியை கட்டுப்படுத்த பவுலர்களுக்கு சவுகரியமாக இருக்கும்' என்று குறிப்பிட்டார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற பிரதிகா ரவால், ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குகிறார். மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரனி, சினே ராணா, ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். பிரதான பவுலர்கள் ரேணுகா சிங், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர் காயத்தால் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் சிவெர், 'நம்பர் ஒன்' சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். மற்றபடி டாமி பிமோன்ட், சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, லாரென் பெல், சார்லி டீன் போன்ற முன்னணி வீராங்கனைகளும் அணியில் தொடருகிறார்கள். அவர்கள் 20 ஓவர் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 76 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 34-ல் இந்தியாவும், 40-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும்.
- இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடக்க டெஸ்டில் சிறப்பாக விளையாடிய போதிலும் இரு இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சில முக்கியமான கேட்ச் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதனால் 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இத்தகைய தவறுகளுக்கு எல்லாம் பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் பரிகாரம் தேடிக் கொண்டனர். குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 211 ரன்களுடன் தடுமாறிய போது கேப்டன் சுப்மன் கில்லுடன் ரவீந்திர ஜடேஜா (89 ரன்), வாஷிங்டன் சுந்தர் (42 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து அணியை 587 ரன்களுக்கு தூக்கி நிறுத்தினர். 2-வது இன்னிங்சில் இதே போல் சரிவுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை விரட்ட முடியாமல் இங்கிலாந்து 271 ரன்னில் பணிந்தது.
கேப்டன் சுப்மன் கில்லின் மலைப்பான பேட்டிங்கும் (269 மற்றும் 161 ரன்), ஆகாஷ் தீப்பின் மிரட்டல் பந்து வீச்சும் (10 விக்கெட்) இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன. அத்துடன் பர்மிங்காமில் டெஸ்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் கிடைத்தது.
இதே உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் புகழ்பெற்ற லண்டன் லார்ட்சில் களம் இறங்குகிறார்கள். ஆனால் முந்தைய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது லார்ட்ஸ் சற்று வித்தியாசமானது. இங்கு ஓரளவு புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சும் எடுபடும். இதனால் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தாலே அது சவாலான ஸ்கோராக இருக்கும். இதற்கு ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகும். 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயர் இன்னும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தனது இடத்தை தக்க வைக்க அவரும் ஜொலிக்க வேண்டியது முக்கியம். சாதனையை நோக்கி பயணிக்கும் சுப்மன் கில் இன்னும் 18 ரன் எடுத்தால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் பிரசித் கிருஷ்ணா வெளியே உட்கார வைக்கப்படுவார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டாங்குக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
பர்மிங்காம் போட்டியில் இங்கிலாந்து அணியில் டாப்-4 வீரர்களான பென் டக்கெட், கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட் ஒருசேர சோபிக்கவில்லை. இதனால் தான் அவர்களால் இந்தியாவை நெருங்க முடியவில்லை. மீண்டும் ரன்வேட்டை நடத்த அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜோ ரூட்டுக்கு இந்த மைதானம் ராசியானது. இங்கு 7 சதமும், 7 அரைசதமும் அடித்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சரிவில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முயற்சிப்போம். சுப்மன் கில் முதல் இரு டெஸ்டிலும் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். அவர் உள்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கட்டுப்படுத்த திட்டங்கள் வகுத்துள்ளோம். டெஸ்ட் அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் திரும்புவது உற்சாகம் அளிக்கிறது. இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடும் போதெல்லாம் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பந்தை கையில் எடுத்து விட்டாலே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். எதிரணியினர் கூட இதை உணர்ந்து இருப்பார்கள். ஏனெனில் அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்கு தெரியும்' என்றார்.
மொத்தத்தில் தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சோயிப் பஷீர்.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
- காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.
இந்திய அணி 6-வது போட்டியில் இங்கிலாந்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. லக்னோவில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணியின் அதிரடி நாளையும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி மான்செஸ்டரில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த 5 போட்டி தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் பலவீனமான இங்கிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
கோலி ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்களும், ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 311 ரன்களும் எடுத்து உள்ளனர். கோலி இன்னும் ஒரு செஞ்சுரி அடித்தால் தெண்டுல்கரின் சாதனையை (49) சமன் செய்வார்.
லோகேஷ் ராகுல் (177 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா 11 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 8 விக்கெட்டும், ஜடேஜா7 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.
கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்த முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் அணிக்கு முக்கியத்துவம் பெற்று விட்டார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றிவிடப்படலாம்.
இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அந்த அணி 1 வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.
நடப்பு சாம்பியனான பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
- 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.
இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
- இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், தாவித் மலான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இங்கிலாந்து 13 ரன்கள் எடுத்தது.
4 ஓவரில் 26 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து நல்ல தொடக்கத்துடன் விளையாடியது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தாவித் மலானை (16) வீழ்த்தினார். அடுத்த பந்தில் ஜோ ரூட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் இங்கிலாந்து அணி தடம் புரண்டது. பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முகமது ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், பேர்ஸ்டோவ் 14 ரன்னிலும் ஸ்டம்பை பறிகொடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து 10 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் இங்கிலாந்து அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜாஸ் பட்லர் 10 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
மொயீன் அலியை (15) முகமது ஷமி வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸை (10) ஜடேஜா வீழ்த்தினார். ஒரு பக்கம் தாக்குப்பிடித்து விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 ரன் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து, டேவிட் வில்லே மற்றும் அடில் ராஷித் ஜோடி விளையாடியது. இதில், அடில் ராஷித் 13 ரன்களில் ஷமியின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
9வது விக்கெட் இழந்த நிலையில், டேவிட் வில்லேவுடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இதில், ஒரு ரன் கூட எடுக்காமல் மார்க் வுட்டும் அவுட்டானார்.
இறுதியில், 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில், 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
- இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.
இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 48 ரன்களும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் விளாசினர்.
ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை தனக்குரியதாக்கி விட்டது.
அடுத்து இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தொடங்குகிறது.
- இங்கிலாந்து அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- அதில் இரண்டு பேர் புதுமுக வீரரர்கள் ஆவார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது.
அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.
- கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
- நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.
2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.
- கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார்.
- இருந்த போதிலும கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 22 வயது த்ருவ் ஜுரேல் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் அவரது தந்தை 800 ரூபாய் கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கிரிக்கெட் விளையாட்டு குறித்து த்ருவ் ஜுரேல் கூறியதாவது:-
நான் ராணுவ பள்ளியில் படித்தேன். அப்போது விடுமுறை காலத்தின்போது, ஆக்ராவில் உள்ள எக்லாவ்யா மைதானத்தின் கிரிக்கெட் முகாமில் கலந்து கொள்ள நினைத்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது தந்தையிடம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தந்தைக்கு தெரியவந்ததால் என்னை திட்டினார். என்றாலும் கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.
மேலும், தந்தையிடம் கிரிக்கெட் பேக் (cricket kit) வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றேன். அப்போது என்னிடம் விளையாட வேண்டாம். விளையாட்டை நிறுத்து என்றார்.
ஆனால், நான் அடம்பிடித்து, பாத்ரூம் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாயார், அவரது தங்கத் செயினை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.
எனது நண்பர்கள் என்னிடம், இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தெரிவித்தார்கள். நான் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் எந்த இந்திய அணிக்கு என்று கேட்டார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணிக்கு என்றேன். இதைக் கேட்டு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சி வசப்பட்டது.
இவ்வாறு த்ருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.






