என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India England"

    • இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    • இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 669 ரன் குவித்தது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 311 ரன் கூடுதலாகும். ஜோ ரூட் (150 ரன்), பென் ஸ்டோக்ஸ் ( 141 ரன்) சதம் அடித்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்னு டனும், கேப்டன் சுப்மன் கில் 74 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும். புதிய பந்து எடுக்கும்போது இந்தியாவுக்கு கடும் சவால் இருக்கும். 80 ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்படும். இதனால் முதல் செசன் (மதிய உணவு, இடைவேளை வரை) மிகவும் முக்கியமானது.

    இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் காயத்துடன் இருக்கும் ரிஷப்பண்ட் ஆடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    2-வது இன்னிங்சிலும் ரிஷப்பண்ட் விளையாடுவார். முதல் ஓவரில் 2 விக்கெட் இழந்த பிறகு கேப்டன் சுப்மன் கில்லும், ராகுலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் விளையாடினார்கள். பந்து வீச்சுத் தன்மையை பொறுத்து பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினார்கள். 3-வது வரிசை குறித்து அணி பெரிதாக கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வலதுகாலில் எலும்பு முறிவு இருந்தபோதிலும் ரிஷப்பண்ட் 2-வது நாளில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். முதல் நாளில் பேட்டிங்கின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேறினார்.

    • நடப்பு டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார்.
    • இதில் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

    ஜார்ஜ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    இந்த டி20 தொடரில் 35 வயதான முன்னாள் கேப்டன் கோலி, ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் விராட் பார்ம் ஒரு பிரச்சனை இல்லை. அவர் அதை இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    விராட் ஒரு தரமான வீரர். அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. 15 வருடங்கள் விளையாடும் போது, பார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் அதை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம்.

    இறுதிப் போட்டியின் சந்தர்ப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்தோம். அதுவே எங்களுக்கு முக்கியமாகும். எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இறுதிப்போட்டியில் இன்னொரு சிறப்பான ஆட்டத்தை நடத்துவேன் என்று நான் நம்புகிறேன்.

    • போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள்.
    • ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.

    இந்தியா பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஷிவம் துபே ஹெல்மட்டில் பவுன்சர் பந்து தாக்கியது. இதனால் இங்கிலாந்து பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தபோது அவர் ஆடுகளத்துக்குள் வரவில்லை.

    பந்து தாக்கியதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விதிப்படி அணியில் சேர்க்கப்பட்டார். ஹர்ஷித் ராணா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதுபோன்ற மாற்றத்தின் போது காயத்தால் விலகிய வீரருக்கு இணையான வீரரை தான் சேர்க்க முடியும். ஷிவம் துபேக்கு மாற்றாக மிகவும் சிறப்பாக செயல்படக் கூடிய பந்து வீச்சாளரை தேர்வு செய்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இது தொடர்பாக கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மாற்று வீரர் விஷயத்தில் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற விஷயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதி தான். எப்படி இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை. என்னிடம் யாரும் இதைப் பற்றி ஆலோசிக்கவில்லை.

    நான் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்ஷித் ராணா யாருக்கு பதிலாக இங்கே இருக்கிறார் என்று தான் நினைத்தேன். அதன் பின்னர் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது இணையான மாற்று வீரர் தேர்வு இல்லை.

    போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். எனவே இந்த விஷயத்தில் மறுப்பு சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் நிச்சயம் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் சில கேள்விகளை கேட்போம். இந்த விஷயத்தில் மேலும் அதிக தெளிவை பெற முயற்சிப்போம்.

    நாங்கள் போட்டியில் வெற்றி பெறாததற்கு இது முழு காரணமும் அல்ல. ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×