என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ்தோனி"

    • முதலில் ஆடிய சி.எஸ்.கே. 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஐதராபாத் 155 ரன்கள் எடுத்து வென்றது.

    சென்னை:

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் தோனி பேசியதாவது:

    நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 154 ரன்கள் எடுத்தது போதுமான ஸ்கோராக இல்லை.

    இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது. அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர். ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.

    பிரேவிஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் எங்களுக்கு அது தேவைப்பட்டது என நினைக்கிறேன்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்ட மிடில் ஆர்டரில் நமக்கு அது போன்ற பேட்ஸ்மேன் தேவை. பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம்.

    இதுபோன்ற ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இடைவெளிகளை அடைப்பது நல்லதுதான். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது மாற்றங்களைச் செய்யாமல் தொடர்ந்து முன்னேற முடியாது. நாங்கள் போதுமான ரன்களை பலகையில் வைக்கவில்லை என தெரிவித்தார்.

    • நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே சீட்டிங் செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் சென்னை அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சென்னை அணி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒவ்வொரு போட்டியின் டாஸ் போடும் போது சொந்த மைதானத்தின் கேப்டன் டாஸ் சுண்டுவதும் எதிரணி கேப்டன் எதனை (H or T) தேர்வு செய்வார் என்பதை மைக்கிலும் கூறி வருவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பு தோனி ரிஷப் பண்ட் தோளில் தட்டிக் கொடுப்பார். அதன் பிறகு டாஸ் போடும் போது மைக்கில் கூறாமல் அருகில் இருந்த போட்டி நடுவரிடம் மட்டுமே தோனி கூறுவார்.

    தோனி கேட்டது டைல் என மைக்கில் கூறப்பட்டது. டாஸில் ஹெட் இருந்தது. ஆனால் தோனிதான் டாஸ் வென்றதாக கூறப்பட்டது. இன்னோரு முக்கியமான விஷயாமாக, டாஸ் சுண்டியதும் நான் தான் டாஸ் வெல்வேன் என்பது போல ரிஷப் பண்ட்டிடம் தோனி ஜாலியாக விளையாடுவார். ஜாலியாக இருந்தாலும் இத்தனை விஷயங்கள் நடக்கும்போது சிறிது சந்தேகம் ஏற்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் பலர் தோனிக்காக இந்த போட்டியை விட்டுக்கொடுத்தது போல இருந்ததாகவும் சிலர் விளக்கத்துடன் கூறி வருகின்றனர்.

    கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின்படி 2020 முதலே தோனி ஸ்பின்னுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 94 தான் வைத்துள்ளார். வேகப்பந்து வீச்சை ஏன் கொடுத்தீர்கள். தோனிக்கு ஸ்பின் பந்து வீச்சை ஆட வரவில்லை என்றால் ஸ்பின்னைத்தானே கொடுக்க வேண்டும், அதுதானே லாஜிக் என தெரிவித்து வருகின்றனர். 

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
    • 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

    இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×