என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india vs england"

    • இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். இதே போல் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 119.4 ஓவர்கள் பந்து வீசி 14 விக்கெட் வீழ்த்தி இருக்கும் பும்ராவுக்கு, ஏற்கனவே முதுகில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அதிகமான போட்டிகளில் ஆடும் போது மீண்டும் முதுகில் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால் இந்த டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார். இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

    நடப்பு தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறது. கேப்டன் சுப்மன் கில் (722 ரன்), லோகேஷ் ராகுல் (511 ரன்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்) ஆகியோர் ரன்வேட்டை நடத்தியுள்ளனர். முந்தைய டெஸ்டில் 311 ரன்கள் பின்தங்கி இருந்த போதிலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அற்புதமான சதத்தால் 143 ஓவர்கள் போராடி 'டிரா' செய்தது.

    இந்த பயணத்துக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடிக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் முதல் 4 டெஸ்களிலும் ஆட்டத்தை 5-வது நாளுக்கு அதுவும் கடைசி பகுதி வரை இழுத்து சென்று தொடரையே பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்ததாக மாற்றி இருக்கிறது, நமது அணி. பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

    தொடரை பறிகொடுக்காமல் 2-2 என்று சமன் செய்தாலே அது பெரிய சாதனையாக இருக்கும். 2021-22-ம் ஆண்டு தொடரையும் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் தான் செய்திருந்தது. எனவே இந்திய அணி, இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வெற்றியோடு நிறைவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 4-வது டெஸ்டில் வலது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். கடந்த இரு டெஸ்டிலும் ஆட்டநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் (304 ரன் மற்றும் 17 விக்கெட்) இல்லாதது நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவு தான். இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    சில முன்னணி வீரர்கள் ஒதுங்கினாலும் இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சூப்பர் பார்மில் உள்ள ஜோ ரூட் (2 சதம் உள்பட 403 ரன்), பென் டக்கெட் (365 ரன்), விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (424 ரன்) தொடர்ந்து ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள்.

    பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். 4-வது டெஸ்ட் முடிந்து அடுத்த 3 நாட்களில் 5-வது டெஸ்ட் தொடங்குகிறது. இது போன்ற 5 டெஸ்ட் தொடரில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகும். அதிக ஓவர்கள் பந்து வீசியிருக்கிறோம். நிறைய நேரம் களத்தில் செலவிட்டு இருக்கிறோம். அதனால் குறைவான இடைவெளியில் போட்டி தொடங்குவது இரு அணிக்குமே கடினமாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டியில் 8-9 நாள் இடைவெளி கிடைத்தது. அதற்கு பதிலாக ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 4-5 நாட்கள் இடைவெளி கொடுத்திருக்கலாம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் அல்லது குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், அன்ஷூல் கம்போஜ், ஆகாஷ் தீப்.

    இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.
    • 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

    நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி, விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், எக்லெஸ்டோன், டாமி பீமோன்ட் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். மொத்தத்தில், அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • பிரதான பவுலர்கள் ரேணுகா சிங், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர் காயத்தால் இடம் பெறவில்லை.

    சவுத்தம்டன்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக (3-2 என்ற கணக்கில்) வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சவுத்தம்டனில் இன்று நடக்கிறது.

    இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்து ஒரு நாள் தொடரையும் வென்றால், செப்டம்பர் 30-ந்தேதி உள்ளூரில் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு (50 ஓவர்) தயாராவதற்கு ஊக்கமளிக்கும்.

    முத்தரப்பு தொடரில் 276, 275, 337, 342 ரன்கள் வீதம் குவித்த இந்திய அணி அதே போன்று ரன்வேட்டை நடத்த ஆர்வம் காட்டுகிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் 300 ரன்களுக்கு மேல் எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதிக ரன்கள் எடுக்கும் போது, எதிரணியை கட்டுப்படுத்த பவுலர்களுக்கு சவுகரியமாக இருக்கும்' என்று குறிப்பிட்டார்.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற பிரதிகா ரவால், ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குகிறார். மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரனி, சினே ராணா, ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். பிரதான பவுலர்கள் ரேணுகா சிங், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர் காயத்தால் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் சிவெர், 'நம்பர் ஒன்' சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். மற்றபடி டாமி பிமோன்ட், சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, லாரென் பெல், சார்லி டீன் போன்ற முன்னணி வீராங்கனைகளும் அணியில் தொடருகிறார்கள். அவர்கள் 20 ஓவர் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 76 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 34-ல் இந்தியாவும், 40-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
    • ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

    என்று பும்ரா கூறியுள்ளார்.

    மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகினார்.
    • கோலி விளையாடததற்கு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போடிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.

    முதல் டெஸ்ட் தொடக்குவதற்கு முன்பு அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி கர்பமாகி உள்ளதால் அவர் விளையாடவில்லை எனவும் ஒருசிலர் அவரது தாயிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வந்தந்திகள் பரவி வந்தது.

     

    இந்நிலையில் எங்கள் தாய் உடல் நலத்துடன் உள்ளதாக விராட் கோலியின் சகோதரர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    இது குறித்து விகாஸ் கோலி கூறியதாவது:-

    என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை. எனது தாய் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
    • ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான் இப்படி ஒரு பிட்சை பார்த்ததில்லை என ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

    ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது.

    என ஸ்டோக்ஸ் கூறினார்.

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
    • போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இப்போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை கண்டக்டரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் (ஏ.சி. பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்த போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40, 11 மணிக்கு வேளச்சேரிக்கும், மறுமார்க்கமாக வேளச்சேரியிலிருந்து இரவு 10.20, 10.40 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் மின்சார ரெயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். பயணத்தின்போது கிரிக்கெட் போட்டிக்கான அசல் டிக்கெட்டை கையில் வைத்திருப்பது அவசியம். டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது அதனை காண்பிக்க வேண்டும்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.
    • இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் எளிதில் வெற்றி கிடைத்தது. ஆனால் சேப்பாக்கத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தால் தோற்கடிக்க முடிந்தது.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார். வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் 11 பேர் கொண்ட அணியில் நீடிப்பார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. 3-வது போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான சவாலை கொடுத்தது. கேப்டன் பட்லர் ஒருவரே நிலையாக ஆடி வருகிறார். ஹேரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி சுமித் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-

    இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஷிவம் துபே, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி. துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரமன்தீப்சிங்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கார்ஸ்,ரெகான் அகமது, சகீப் மகமூத்.

    மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணியும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றனர். #WomensT20WorldCup
    கயானா:

    6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை அறிவிக்கை தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #test
    லண்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று 2-வது நாள் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு முன்பாக (இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.



    லண்டனில் வானிலை அறிவிக்கையின்படி காலையில் வெயில் அடிக்கும் என்றும், பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் போட்டி தொடங்கினாலும் இடையில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. #ENGvIND #INDvENG #test
    உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. #HWC2018
    உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போட்டியை நடத்தும் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின.

    முதல் 15 நிமிடத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. நேகா கோயல் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.



    54-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் கடைசி 7 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்தியா அடுத்த போட்டியில் வருகிற 26-ந்தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
    ×