என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்தபிசுர் ரஹ்மான்"

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
    • இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

    2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.

    ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார். 

    இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்தது. தொடர்ந்து அணி போட்டிகளில் விளையாடியும் வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்புவில் பிப்ரவரி 15, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசனில் விளையாடுவதற்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், லாகூர் குவாலண்டர்ஸ் அணியால் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் ஒரு பகுதியாக முஸ்தபிசுர் இருந்துள்ளார். 

    • முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது
    • இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்கதேச அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "மார்ச் 26, 2026 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்காளதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ஒரு உத்தரவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். 

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இம்முடிவு வங்கதேச மக்களைப் புண்படுத்தி, துயரப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும்சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    ×