search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup 2019"

    இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5-வது முறையாகும்.

    2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் இந்த உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டு விட்டது. சிறிய அணிகள் அதாவது ஐ.சி.சி. உறுப்புநாடுகள் எதுவும் இடம் பெறாத ஒரு போட்டியாக இது நடக்கிறது.

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

    முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. அசுர பலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5-ஐ (மற்றொரு தொடர் சமன்) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அண்மைகால இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை பார்த்தால், சகட்டுமேனிக்கு அதிரடி காட்டி எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்கள்.

    குறிப்பாக ஜோஸ் பட்லர், கேப்டன் மோர்கன், ஜாசன் ராய் ஆகியோர் சந்திக்கும் முதல் பந்தில் இருந்தே ‘கதகளி’ ஆடத் தொடங்கி விடுவார்கள். முதலில் பேட் செய்தால் 300 ரன்கள் மேல் எடுத்து விட வேண்டும் என்பது அவர்களது இலக்கு. அதுவும் இது சொந்த ஊர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘ராஜ்ஜியம்’ தூக்கலாகவே இருக்கும்.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் மட்டுமே பேட்டிங்கில் திருப்திகரமான பார்மில் உள்ளனர். அதற்காக மற்றவர்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. காஜிசோ ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சாதுர்யமாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கக்கூடிய திறமை சாலிகள். மூத்த வீரர் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் தொடர்களையும் (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக) வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.

    இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரையிறுதியை தாண்டியதில்லை. தங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். இரு அணி வீரர்களும் களத்தில் ‘நீயா-நானா’ என்று ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்பதால் அனல் பறக்கும். ரசிகர்களுக்கோ குதூகலமான விருந்து கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் அல்லது மார்க் வுட்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், பிரிட்டோரியஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று லண்டனில் அரண்மனை அருகே உள்ள திறந்தவெளிப்பகுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாலியாக சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினர். ஆடல், பாடல், இசை நிகழ்ச்சியை 4 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
    காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.

    உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.

    இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

    இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு மெக்ராத் கூறினார்.
    இலங்கை அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஜெயவர்தனே, உலகக்கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்தனே. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    கடந்த வருடம் குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அளித்திருந்தனர்.

    ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரத்தில் தலையிடாமல் இருக்கிறார்.

    தற்போது உலகக்கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஜெயவர்தனே அதை மறுத்துவிட்டார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒட்டுமொத்த முழு கட்டமைப்பு பற்றி என்னால் எதையும் சொல்ல முடியவில்லை என்றால், யுக்திகள் போன்ற விஷயத்தில் நான் தலையிட அங்கு ஏதும் இல்லை. அணியின் தேர்வு உள்பட எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இதனால் அங்கு வந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.
    லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.

    சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    நாட்டிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கு முன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.

    அப்போது விராட் கோலி கூறுகையில் ‘‘நீங்கள் ஏராளமான வகைகளில் இருந்து உத்வேகத்தை பெறலாம். ஆனால், ஒரு விஷயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது மிகப்பெரியது. இந்திய ராணுவத்தை பற்றி பேசும்போது, அதைவிட சிறந்த உத்வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தைப் பற்றி பேசும்போது, அதனுடன் வேறு எதையும் ஒப்பிட இயலாது.

    இதே உத்வேகத்துடன் நாம் சென்றால், ராணுவத்திற்காக ஏதாவது செய்ய முடியும். உயர்ந்த நிலை பேரார்வத்தை உங்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். ஆனால், இதுவெல்லாம் ஏராளமான மற்ற காரணிகளையும் சார்ந்துள்ளது. உலகக்கோப்பையில் விளையாடும்போது ஒவ்வொரு வீரர்களுக்கு தனிப்பட்ட உத்வேகம் இருக்கும். ஒவ்வொருவரும் ராணுவத்தை மனதில் நினைத்தால், அதன்மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்’’ என்றார். 
    நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து செல்லும் முன் பேட்டி அளித்துள்ளார்.

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து செல்கிறது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    முந்தைய உலக கோப்பையை விட தற்போதைய தொடர் சவாலனாதாக இருக்கும். 2015-ம் ஆண்டை விட தற்போது ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் அணி வலுவானதாக உள்ளது. சவாலை முறியடித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.

    இங்கிலாந்து ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறேன். இந்திய அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ஆட்டம் இந்த உலக கோப்பையில் பெரும் பங்கு வகிக்கும். அவரின் சிறு செயல்பாடுகள் கூட போட்டியின் ஆட்டத்தை மாற்ற கூடியது.

    இந்திய அணி வீரர்கள் சவாலை கருத்தில் கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் திரும்பி இருப்பது போட்டியில் அணியின் ஆட்ட திறனை அதிகரிப்பதாக அமையும். அவர்கள் இருவரும் அணிக்கு வெளியே இருந்த போது ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. நான் மட்டுமின்றி ஒட்டு மொத்த அணியே அவர்கள் இருவரும் அணிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டேவிட் வார்னர் நன்றாக விளையாடினார். ஸ்டீவன் சுமித் பீல்டிங் செய்கையில் சற்று தடுமாறினார். இருப்பினும் அவர் நல்ல பார்முக்கு வந்து விடுவார். உலக கோப்பையை தக்க வைத்து கொள்ள உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியினர் போராடுவார்கள். நிச்சயமாக எதிரணிகளுக்கு சவால் அளிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பி இருக்கிறார். கம்மின்ஸ் நன்றாக பந்து வீசி வருகிறார். எங்களது பந்து வீச்சு பலம் அதிகரித்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    உலக கோப்பை போட்டி நீண்ட நாட்கள் நடக்கக்கூடியதாகும். அணியில் வலுவான மாற்று வீரர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். சரியான வேகப்பந்து வீச்சு இல்லை என்றால் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற முடியாது. ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நாங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் அந்த அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதனால் இயற்கையாகவே இங்கிலாந்து அணிக்கு சில அனுகூலங்கள் இருக்கும். இருப்பினும் அந்த அணிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சவால் அளிக்கும். வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளும் வலுவானது தான். சாம்பியன் பட்டம் வெல்ல மிகவும் திறந்த வாய்ப்பு உள்ள போட்டி இதுவாகும். இதில் இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், மற்ற அணிகளும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.
    இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தவருமான கவுதம் காம்பிர் கணித்து உள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காம்பிர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு நுழையும். உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோலியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். பந்து வீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

    இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

    உலகக்கோப்பையை வெல்ல 2-வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.



    2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதத்தை தவறவிட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக்கோப்பையை வெல்வதே. எனது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 97 ரன் என்பது அணிக்கு முக்கியமானது. 3 ரன்னில் சதத்தை நழுவ விட்டதற்காக நான் வருத்தம் அடைந்தது கிடையாது.

    நானும் டோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது முக்கியமானது. இறுதிப் போட்டியில் நான் எந்தவித நெருக்கடியுடனும் ஆடவில்லை.

    இவ்வாறு காம்பீர் கூறினார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதாகும் இவர் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடியுள்ள இவருக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற இருக்கும் உலகக்கோப்பை ஐந்தாவது தொடராகும்.

    பொதுவாக கிறிஸ் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்கள் எடுக்க வேகமாக ஓடமாட்டார். மேலும் அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய இயலாது.



    கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் கெய்ல் ஜிம்மை தவிர்த்து யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.

    ஜம்மை தவிர்ப்பதாலும், போட்டிகளுக்கு இடையில் அதிக அளவில் ஓய்வு எடுப்பதாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.
    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் நடக்கிறது.

    இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் டோனி தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.



    அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார். உலக கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். நெருக்கடியான நேரத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து நிதானமாக ‘பேட்டிங்’ செய்யக்கூடிய திறமை கொண்டவர். இந்த ஒரு வி‌ஷயத்தை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரும் தேர்வு குழுவினரும் ஒப்புக் கொண்டனர். இதனால் தினேஷ் கார்த்திக்குக்கு இயல்பாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.



    தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கிறது. டோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணியை கவனிக்க முடியும்.

    மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர். இந்த அடிப்படையில் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    33 வயதான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனி வருவதற்கு ஒரு ஆண்டு முன்பே சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

    2004-ல் அறிமுகமான அவர் 2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர்.

    தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.



    ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×