search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvIND"

    • இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம்.
    • எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம்.

    கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்தது.

    அதேபோல் 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இந்நிலையில் மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம் என்று தொடரை வென்ற பின்னர் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ரோவ்மன் பாவெல் கூறினர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம். எங்கள் உணர்வுகளை கூற போதுமான சொற்கள் இல்லை. ஒரு நெடிய தொடரில் இந்திய அணியை தோற்கடித்துள்ளோம். நேற்று இரவு (4வது போட்டி அன்று) நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்ட பிறகு உட்கார்ந்து பேசினோம்.

    எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம். பயிற்சி ஊழியர், சேர்மன் ஆகியோருக்கு இந்த பெருமை போய்சேரும். இந்தியா போன்ற அணிக்கு எதிராக தொடரை வெல்வது பெரிய விஷயம்.

    தனிப்பட்ட செயல்திறனில் நான் பெரியவன், தனிநபர்கள் சிறப்பாக செயல்படும் போது அது அணிக்கு உதவுகிறது. நிக்கோலஸ் பூரன் ஒரு சிறந்த வீரர். ஐந்து ஆட்டங்களிலும் ஒரு வீரர் ரன்களை குவிப்பது எளிதல்ல என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் சிறப்பான ரன்களை சேர்த்தால் வெற்றிகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
    • முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    புளோரிடா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கைல் மேயர்ஸ் 10 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

    பிராண்டன் கிங் அரை சதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பிராண்டன் கிங் 54 ரன்னும், நிகோலஸ் பூரன் 46 ரன்னும் எடுத்திருந்தனர்.

    அரை மணி நேரத்துக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தது. 2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் நிகோலஸ் பூரன் 47 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்களை எடுத்து வென்றது. பிராண்டன் கிங் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை 3-2 என கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
    • இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

    • இதுவரை 4 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என சமனிலையில் உள்ளன.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த இரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரகள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    புளோரிடா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 45 ரன்களை குவித்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக தெறிக்க விட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 47 பந்தில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 51 பந்தில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

    • 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீசும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் புரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்கக்கூடாது என்பதற்காக இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
    • சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    லாடர்ஹில்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹிலில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும்.

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் குவிக்க திணறி வருகிறார். அதேபோல் சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சாகல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் இந்தியா களம் இறங்கும்.

    ரோமன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் கில் பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஹெட்மயர், மேயர்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் மெக்காய், ஷெப் பர்ட், ஜோசன், ஹூசன் ஆகியோர் உள்ளனர்.

    நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. ஆனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3-வது போட்டிக்கு முன்பு பாண்ட்யா அடித்த பந்து சிறுமியை தாக்கியது.
    • 3-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த இக்கட்டான சூழலில் 3-வது போட்டியில் இரு அணிகளும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

    இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒரு சிறுமியை தாக்கியது. உடனே அந்த சிறுமி பிசிசிஐ-ன் மருத்துவ குழுவை அனுகினார். பின்னர் அந்த சிறுமியை போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று பாண்ட்யா கூறினார். பின்னர் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட பந்தை அவர் பரிசாக வழங்கினார். அதை வாங்கி கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.


    திலக் வர்மாவை அரை சதம் அடிக்க விடாமல் செய்து விட்டதாக ஹர்திக் பாண்ட்யா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.
    • நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    கயானா:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.

    பிரெண்டன் கிங், 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோமன் போவெல் 19 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 83 ரன்னும் (10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 37 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் 2 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றது. இதில் தோற்று இருந்தால் 20 ஓவர் தொடரை இழந்து இருக்கும். வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது என்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பேசி இருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு விளையாடினோம்.

    நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததால் எங்கள் பந்து வீச்சாளர்களை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக அக்ஷர் படேலுக்கு அவருக்கு உரிய 4 ஓவர்களையும் முழுமையாக வழங்க முடிந்தது.

    நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க நினைத்தால் எனது பந்தில் அடித்துக் கொள்ளட்டும் என்றே நான் காத்திருந்தேன். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    7 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இந்த திட்டம் தவறாக போகும் பட்சத்தில் அதற்கு நாங்கள் தான் பொறுப்பாகும். முதல் 7 பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை சரியாக செய்து விட்டால் 8-வது வீரருக்கு வேலை இருக்காது என்பதே எனது கருத்தாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மாவும் மிக சிறப்பாக விளையாடினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:

    இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

    இந்த டி20 தொடரில் 7 பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன்மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.

    ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது.

    சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக் கூடியவர்கள்.

    சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள். இதன்மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

    பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என பாண்ட்யா கடந்த போட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

    ×