search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravid"

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 2-ந் தேதி மோதுகிறது.
    • நாங்கள் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் மோத உள்ளோம்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி தொடர் பாகிஸ்தான், இலங்கையில் வருகிற ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங் களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    சூப்பர்-4 சுற்றில் தங்களுக்குள் மோதி அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 2-ந் தேதி மோதுகிறது.

    இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி என இந் தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. நாங்ள் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் மோத உள்ளோம். முதலில் அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று, போட்டி எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது.

    ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம். அதை பாகிஸ்தானும் செய்ய வேண்டும். இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். நாங்கள் நிச்சயமாக இறுதி வரை விளையாடி வெற்றிபெற விரும்புகிறோம். அதற்கான முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
    • இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    மும்பை:

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.

    புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.

    சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.


    ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.

    இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார்.
    • தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

    வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12-ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ் வருகை தந்தார். அவரை உற்சாகமாக வரவேற்ற இந்திய அணியின் வீரர்கள் பேசி மகிழ்ந்தனர். விராட் கோலி, ரோகித் தங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.


    பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார். தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

    ராஜ்கோட்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

    37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று 20 ஓவர் போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    நான் விளையாடும் ஆட்ட வரிசை சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். பயிற்சியாளர் டிராவிட்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்களின் அறை அமைதியாக இருக்கிறது. நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்று கற்று கொள்வது முக்கியமானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.
    • இந்த போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    புது டெல்லி:

    இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

    இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.

    இந்நிலையில் இந்த உலக சாதனை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு, பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம்.

    வலுவான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் குறித்து சில விவரங்களை காண்போம். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 22 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் தொடரையும், வெஸ்ட்இண்டீஸ் 12 தொடரையும் வென்றுள்ளன. 2 டெஸ்ட் தொடர் சம நிலையில் முடிந்தது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் தொடரையும் (2002-2016) இந்திய அணியே கைப்பற்றி வலுவானதாக இருக்கிறது. இதில் 3 தொடர் சொந்த மண்ணிலும், 3 தொடர் வெஸ்ட்இண்டீசிலும் நடந்தவையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 4-ல், வெஸ்ட்இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றன. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    இரு அணிகளும் 94 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய அணி 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் டெல்லியில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன் (1959) குவித்து இருந்தது.

    இந்திய அணி 1987-ம் ஆண்டு டெல்லியில் 75 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ரன் ஆகும்.

    கவாஸ்கர் 27 டெஸ்டில் விளையாடி 2749 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 236 ரன் குவித்துள்ளார். கிளைவ் லாயிட் 2344 ரன்னும், சந்தர்பால் 2171 ரன்னும், டிராவிட் 1978 ரன்னும், விவியன் ரிச்சர்ட்ஸ் 1927 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகன் கசாய் (வெஸ்ட்இண்டீஸ்) 1958-ம் ஆண்டு கொல்கத்தாவில் 256 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் ஆகும். கவாஸ்கர் அதிகபட்சமாக 13 சதம் எடுத்துள்ளார். சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ் தலா 8 செஞ்சூரி அடித்துள்ளனர்.

    கபில்தேவ் 89 விக்கெட் (25 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மால்கம் மார்‌ஷல் 76 விக்கெட்டும், கும்ப்ளே 74 விக்கெட்டும், வெங்கட்ராகவன் 68 விக்கெட்டும், ஆன்டி ராபர்ட்ஸ் 67 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கபில்தேவ் 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சின் (அகமதாபாத், 1983) சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்ட்டில் அதிகபட்சமாக நரேந்திர ஹர்வானி 16 விக்கெட் (சென்னை, 1988) கைப்பற்றினார். #INDvWI
    ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்த கே. எல் ராகுல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvIND #OvalTest #KLRahul

    இந்தியா இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில், கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் கே. எல் ராகுல், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

    இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் 10 கேட்ச்களை பிடித்திருந்த அஜித் வடேகர், ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் கே.எல் ராகுல். தற்போது, ஓவலில் நடந்து வரும் 5-வது போட்டியிலும் கே.எல் ராகுல் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    பொதுவாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் 13 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் தான் முதலிடத்தில் உள்ளார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 13 கேட்ச்களை பிடித்துள்ளார். 

    ஓவல் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா பந்தில் பிராட் ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம், இந்த தொடரில் ராகுல் 13 கேட்ச் பிடித்து டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளதால், அதில் கே.எல் ராகுல் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால் புதிய சாதனையை படைப்பார். 
    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் வடேகர், கபில்தேவ், டிராவிடுடன், விராட் கோலியும் இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvENG #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1971-ம் ஆண்டு (1-0) அஜித் வடேகர் தலைமையிலும், 1986-ம் ஆண்டு (2-0) கபில்தேவ் தலைமையிலும், 2007-ம் ஆண்டு (0-1) டிராவிட் தலைமையிலும் கைப்பற்றி இருந்தது. இவர்களோடு விராட் கோலியும் இணைவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.



    இரு அணிகளும் நாளை மோதுவது 118-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 117 போட்டியில் இந்தியா 25 டெஸ்டிலும், இங்கிலாந்து 43 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 49 போட்டி ‘டிரா’ ஆனது. #INDvENG #ENGvIND #ViratKohli
    ×