search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kapil dev"

    • முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன்.

    2023 -24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

    இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    முதல்தர கிரிக்கெட்டுக்காக கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் விளையாட வேண்டும். அது நாட்டுக்கு நல்லது. நாட்டிற்கு எது நல்லதோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள். ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது.

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும். இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்
    • டிப்ரஷன், பிரஷர் என்பதெல்லாம் அமெரிக்க வார்த்தைகள் என்றார் கபில்

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி இரு-போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமான டிசம்பர் 26-ல் முதல் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதாக இருந்த தொடக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.

    இப்பின்னணியில், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடும் வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சனைகள் குறித்து 1983ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியாவிற்காக கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் 2022ல் "சாட் வித் சாம்பியன்ஸ்" (chat with champions) எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் கபில் தேவ் தெரிவித்ததாவது:

    ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்டவும், மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதாக வீரர்களுக்கு தோன்றினால் ஐபிஎல்-லில் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஐபிஎல் தேசத்திற்கான விளையாட்டு அல்ல. உங்களுக்கு மனதளவில் களைப்பு உருவானால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தவறில்லை. க்ளப் கிரிக்கெட் (ஐபிஎல்) வேறு, நாட்டிற்காக விளையாடுவது வேறு. டிப்ரஷன், பிரஷர் என்பவை அமெரிக்க வார்த்தைகள்; அவை எனக்கு புரிவதில்லை. நான் ஒரு விவசாயி. விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகும் போது பிரஷர் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு கபில் கூறினார்.

    • கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
    • 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.

    இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.

    ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.

    நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.

    பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.

    அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.


    இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது
    • 1983ல் மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு கபில் தேவ் தேடி தந்தார்

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கியது.

    இப்போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தொடர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.

    இறுதிப்போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதை காண, இதுவரை நடைபெற்ற அனைத்து ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற அணிகளின் அப்போதைய கேப்டன்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அழைப்பு விடுத்தது.

    ஆனால், இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் முதல்முதலாக உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவின் பெயர் இந்த அழைப்பிதழ் பட்டியலில் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி கபில் தேவ், இன்று நரேந்திர மோடி மைதானத்திற்கே வரவில்லை.

    இது குறித்து முன்னாள் கேப்டன் தெரிவித்ததாவது:

    நான் அழைக்கப்படவில்லை என்பது உண்மைதான். என்னை அழைக்கவில்லை. அதனால் நானும் செல்லவில்லை; அவ்வளவுதான். 1983ல் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுடன் அங்கு இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். எனக்கு வருத்தமில்லை. இது மிக பெரிய நிகழ்ச்சி. பல பொறுப்புகளில் முக்கியமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் எங்களை போன்றவர்களை அழைக்க மறந்து விடுகிறார்கள். சில நேரங்களில் மக்களுக்கு மறதி ஏற்படுவது சகஜம்தான்.

    இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

    40 வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் அணி இருந்து வந்தது. 1983 உலக கோப்பை போட்டியில் அவர்களை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது.

    இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்புதான் கிரிக்கெட் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்க தொடங்கியது. அதற்கு பிறகு இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் வர தொடங்கியது. பல இந்திய முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கபில் தேவ்தான் கனவு நாயகன்.

    மகத்தான வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்து, இந்திய இளைஞர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்ள காரணமாயிருந்த கபில் தேவிற்கே தற்போதைய இறுதி போட்டியில் அழைப்பு இல்லை எனும் செய்தியை கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோவில் புதிய விளக்கம்.
    • உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனதோடு, பரபரப்பையும் கிளப்பியது. வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கடத்தப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

    எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை.
    • வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

    மும்பை:

    2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. 2011-க்குப் பிறகு உலகக் கோப்பையை 3-வது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 2-வது ஒருநாள் போட்டியில் தோற்றே போனது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் சோடை போயுள்ளதாக கபில் தேவ் காட்டமாக விமர்சித்துள்ளார். பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை.

    ரிஷப் பந்த் காயமடைந்ததால் நம் டெஸ்ட் கிரிக்கெட்டும் சற்றே பின்னடைவு கண்டுள்ளது, ரிஷப் பண்ட் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். நான் காயமடையாமல் ஆடினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். சந்தேகத்தின் பலனை இதற்கு அளித்தோமானால் அனைவரும் தங்கள் உடம்பை தாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் பெரிய விஷயம்தான். ஆனால் அது வீரர்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவதும் உண்டு.

    நான் இந்த விஷயத்தில் ஓபனாகவே இதைத்தான் கேட்கிறேன். சிறிய காயம் என்றால் முக்கியமான போட்டி என்று ஐபிஎல் போட்டியில் ஆட முடிகிறது. ஆனால், நாட்டுக்காக என்று வரும் போது ஓய்வு கேட்கின்றனர். விடுப்பு கேட்கின்றனர்.

    வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கின்றது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிட்ஜ்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா 44 விக்கெட்டை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2-வது இடத்திலும் 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே 3-வது இடத்திலும் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    • ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும்.
    • அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி. கடினமான நாட்களிலும் அவரது அமைதியான ஆளுமையின் காரணமாக 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், அந்த புனைப்பெயருக்கு மற்றொரு போட்டியாளர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் அசல் "கேப்டன் கூல்" என்று கூறினார்.

    1983-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

    உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் கேப்டன் கூல் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.


    இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:-

    அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

    மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

    என்று அவர் கூறினார்.

    அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர்.

    தந்தையை போலவே அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. இடது கை பந்து வீச்சாளரான அவர் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.

    22 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டும் இந்த நிலைதான்.

    இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது குறித்து மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, ‘மும்பை போன்ற அணியில் இடம் பெறுவதும், ஆடும் லெவலில் இடம்பிடிப்பதும் வெவ்வேறானது. அணிக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அர்ஜூன் தெண்டுல்கர் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டால் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த நிலையில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தெண்டுல்கரின் பேட்டிங் தரத்தை எந்த ஒரு நவீன கால மேட்ஸ்மேனுடனும் இணைக்க இயலாது. அவருடைய மகனாக இருந்தாலும் ஒப்பிடக்கூடாது. அவரது வயதை கருத்தில் கொண்டு விளையாட விடுங்கள். குடும்ப பெயரால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது.

    அவருக்கு நாம் அழுத்தம் கொடுக்க கூடாது. அவரிடம் எதுவும் சொல்ல நாம் யார்? அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

    எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உங்கள் தந்தையை போல் 50 சவீதம் கூட ஆக முடிந்தால் நன்றாக இருக்கும். சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர் என்பதால் எங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
    ×