என் மலர்
நீங்கள் தேடியது "Test Series"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
- இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.
வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.
தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.
இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-
நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.
4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #ViratKohli
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.
ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர, விராட் கோலி, புஜாரா உள்பட முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இன்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 42 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.
இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறியிருப்பதால், இந்த இலக்கை துரத்துவது மிக கடினம். இதனால், இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 11 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. #AUSvIND
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.




இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-

பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் கவனித்து வருகிறேன். இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை நிச்சயமாக வெல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே இருக்கிறது. பெர்த் டெஸ்டில் இது வெட்டவெளிச்சமாகி விட்டது.
தொடக்க வீரர் காயம், புதிய வீரரை அடுத்த டெஸ்டில் களம் இறக்குதல் போன்ற சூழல் இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்கும்.
ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் அமைதியாக ஆடினாலே இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம்.
மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். அந்த அணியின் வெற்றி நீடிக்கும்.
இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார். #AUSvIND #RickyPonting
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி போராடி தோற்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன.
இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் லோகேஷ்ராகுல் (149 ரன்), விக்கெட் கீப்பர், ரிஷப்பாண்ட் (114 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இந்திய அணி 94.3 ஓவர்களில் 345 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது இதனால் இங்கிலாந்து அணி 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராகுலும், ரிசப்பாண்டும் தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்ய கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதி வரை அவர்களால் போராட இயலவில்லை.
ஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷித், சாம்குர் ரான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த தோல்வி மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.
பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், சவும்தானில் நடந்த 3-வது டெஸ்ட் 60 ரன் வித்தியாசத்திலும் ஏற்கனவே இந்தியா தோற்று இருந்தது. நாட்டிங்காமில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
நாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.
லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.
இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் (டிரா’ செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.
இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய விஷயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKholi
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது .
இதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்டிலும் இந்தியா தோற்றது. 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது. சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன்முலம் டெஸ்ட் தொடரை இழந்தது.
இங்கிலாந்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-
விராட்கோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒருவரை மட்டுமே அணி நம்பி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும்.
விராட்கோலி முக்கியமான வீரர் ஆவார். நீங்கள் முக்கியமான வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். ஒரு வீரரை நம்பி இருக்கும் போது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கூட்டாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற இயலும்.
இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியைவிட அவர்கள் நன்றாக ஆடுவார்கள்.
ஆனாலும் நமது அணி இங்கிலாந்தை விட சிறப்பானதாகவே இருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியமானது. நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமானால் அடிக்கடி தவறுகள் செய்யக்கூடாது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvENG #ViratKohli #KapilDev
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன.
168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 521 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 317 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதன் முலம் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்னும், 2-வது இன்னிங்சில் 103 ரன்னும் எடுத்து இந்திய கேப்டன் விராட்கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-
அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்ட மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழுமையான டெஸ்ட் போட்டியாக இருந்தது.
ஒரு பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். அதை களத்தில் செய்து காட்டினோம். அதன் பின் பந்து வீச்சாளர்கள் தங்களது பணியையும் கச்சிதமாக செய்தனர்.
பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தனர். ஸ்லிப் பகுதியில் கேட்சுகளை துல்லியமாக பிடித்ததால் இப்போட்டியில் வெற்றி பெற்றோம்.
இத்தொடரில் வேகமாக வீசக்கூடிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியர்களாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இன்னும் நிறைய டெஸ்டில் விளையாடும் போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகுவார்கள்.
டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறோம். 0-2 என்ற கணக்கில் இருந்து 3-2 என்ற கணக்கில் தொடரில் வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று வெற்றி பெற விரும்புகிறோம். இந்த உத்வேகத்தை எஞ்சிய இரு டெஸ்டிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #ViratKholi