என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test series"

    • இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:-

    ஜக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
    • டெஸ்ட்டில் கருண் நாயரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்தது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை இன்று அறிவித்துள்ளது.

    அந்த வகையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக 2017-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

    டெஸ்ட்டில் 6 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும். இதனை இங்கிலாந்து எதிராக அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி விவரம்:

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    • விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இந்நிலையில், "விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்று நினைப்பதை நான் அவமானமாக கருதுகிறேன்" என்று மெசேஜை கோலிக்கு அனுப்பியதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஸ்டோக்ஸ், "இந்த முறை விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்பது எனக்கு அவமானமாக இருக்கும் என்று நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். கோலிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் நாங்கள் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருப்பதால் நாங்கள் எப்போதும் போட்டியை ரசித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

    • விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.

    தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், "ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார்.
    • 14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    அதைதொடர்ந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    தற்போது 1 வாரத்துக்குள் இருவருமே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாடுவார்கள்.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறும்போது, 'இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய 'ஏ' அணி அங்கு செல்கிறது. இந்த அணியில் விளையாடி 3 முதல் 4 சதங்கள் அடிக்க கோலி விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆர்வத்தில் அவர் இருந்தார்' என்றார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி ரஞ்சி டிராபியில் ஆடினார். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் தான் இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது அவருக்கு இருந்த அதிருப்தி, ரோகித்சர்மாவின் ஓய்வு போன்றவற்றால் கோலி முன்னதாகவே ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் இந்திய வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பயணத்தின் போதும் இதே கட்டுப்பாடு இருக்கும். இதனால் பி.சி.சி.ஐ. மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருப்பார். இந்த டெஸ்ட் தொடருக்கு சுப்மன்கில் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம். இளம் வீரரின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தனது ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மட்டும் தன்னை மீண்டும் கேப்டனாக நியமிக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதாகவும், அதை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பி.சி.சி.ஐ. வேண்டுகோளை நிராகரித்து டெஸ்டில் இருந்து நேற்று விடைபெற்றார்.

    14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. பல்வேறு சாதனைகளை புரிந்து சாதித்து இருந்தார்.

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
    • சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இத்தொடரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இஷான்கிஷன், கருண் நாயர், ஆகாஷ்தீப், ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    சுப்மன்கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், ரிஷப்பண்ட், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
    • அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.

    இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

    ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.

    இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது.  ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

    அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது. 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
    • இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.

    வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 75.4 ஓவர்களில் 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் அடித்தது. அலிக் அத்தானஸ் 5 ரன்களுடனும், மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலிக் அத்தானஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லூயிஸ் -கவேம் ஹாட்ஜ் ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். லூயிஸ் 57 ரன்னிலும் ஹாட்ஜ் 55 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 81 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் - டக்கட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் 24 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 7.2 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • காயத்தில் இருந்து மீண்ட சமி பேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் முகமது சமி பங்கேற்காமல் இருந்தார்.


    இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது சமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

    வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

    • இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

    முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×