என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கஸ் ஸ்டாய்னிஸ்"

    • மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தேறுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்தியா (3-2) மற்றும் பாகிஸ்தான் (5-0) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.

    இதனால் ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என அந்த அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வெளிநாட்டு மண்ணில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மிகமிக முக்கியம். இது எங்களுக்கு தேவைப்பட்டது. இதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.



    இது எங்களுக்கு நல்ல நேரம். ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டும்.

    உலகக்கோப்பைக்கான எங்கள் அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இணைந்தது மிகப்பெரிய பூஸ்ட். கடந்த சில மாதங்களாக வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். உலகக்கோப்பைக்கான காம்பினேசன் அணியாக இருப்போம்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வருடந்தோறும் வழங்கும் விருதுகளை நாதன் லயன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் வென்றுள்ளனர். #CricketAustralia
    ஒவ்வொரு வருடமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் விருதுகள் வழங்கி வருகிறது. இதேபோல் கடந்த வருடம் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    சுழற்பந்து வீச்சாளரான நான் லயன் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதையும் வென்றனர்.

    பெண்களுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை அலிசா ஹீல் வென்றார்.
    ×