என் மலர்
நீங்கள் தேடியது "qualifier 2"
- ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிக்கு விளாசினார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
குறிப்பாக இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிகள் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொன்னபோனால் இதற்கு முன்பாக டெல்லி அணிக்கு விளையாடிய போதும் பும்ராவின் யார்க்கர் பந்துகளை இதே போல் ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்துள்ளார்.
இந்நிலையில், "பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட்" என்று ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், "பும்ராவின் யார்க்கர் பந்துகளை ஷ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்த ஆண்டு ஐபிஎல்-ன் சிறந்த ஷாட். பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை நான் எதிர்கொண்டிருந்தால் என் மிடில் ஸ்டம்புகளை பந்து தாக்கியிருக்கும்.
ஸ்ரேயஸ் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தன. அவரது தலை அசையாமல் இருந்தது. அவர் அமைதியாகவும், சமநிலையுடனும் இருக்கிறார். அவர் திமிர்பிடித்தவர் அல்ல. அதனால் எனக்கு அவரைப் பற்றி மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் இன்னும் அதிக ரன்களை குவிப்பார்" என்று பாராட்டினார்.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
- இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த மிடில் ஆர்டர் வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்தார்.
- நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்..
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த மிடில் ஆர்டர் வீரர்
சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)
ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)
ரிஷப் பண்ட் - 684 ரன்கள் (2018)
கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)
- 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது
- வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தொடர்ச்சியான 2 ஐபிஎல் சீசன்களில் இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.
இதில், 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
- மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அண்மையில் முடிந்த எலிமினேட்டர் போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200+ ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:
204 - PBKS vs MI, அகமதாபாத், 2025*
200 - KKR vs PBKS, பெங்களூரு, 2014
191 - KKR vs CSK, சென்னை, 2012
189 - GT vs RR, கொல்கத்தா, 2022
179 - CSK vs SRH, மும்பை, 2018
- முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க இருந்தது.
டாஸ் போடப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ,பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
- குவாலிபையர்1 ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.
அகமதாபாத்:
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 26-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2-வது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014-ல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (516 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (431 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), ஜோஷ் இங்கிலீஷ், வதேரா, ஷசாங்க் சிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் இருக்கிறது.
அந்த அணியின் பந்து வீச்சில் பும்ரா துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இதுவரை 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), ரோகித் சர்மா (410 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, பேர்ஸ்டோவ், நமன் தீர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், டிரென்ட் போல்ட் (21 விக்கெட்), சாண்ட்னர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.
- எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
- மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச்சுற்று-2ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
போட்டிக்கு பின்பு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் ஜஸ்ப்ரித் பும்ரா எப்போது பந்து வீச வேண்டும் என நீங்கள் எப்படி முடிவு எடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அது மிகவும் சுலபமானது. போட்டி எப்போதெல்லாம் எங்கள் கையை மீறி செல்கிறது என உணர்கிறோமோ அப்போதெல்லாம் பும்ரா தான்" என்று பதில் அளித்தார்.