search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "qualifier 2"

    விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர். #IPL2019 #CSKvsDC #Qualifier2
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியின் பிளேஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து தகுதி பெற்றன.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து ‘லீக்‘ முடிவில் வெளியேற்றப்பட்டன.

    ‘பிளேஆப்’ சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலியர்-1’ ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து ‘குவாலிபையர்-2’ போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்சுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லியை 2 முறை ‘லீக்‘ ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    பெரோசாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 80 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி கடந்த சில போட்டியில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. 7 போட்டியில் 5-ல் தோற்றது பரிதாபமே. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பையிடம் மிகவும் மோசமாக தோற்றது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கு அணியின் மோசமான பேட்டிங்தான் காரணம். பந்து வீச்சு நல்ல நிலையில் இருந்தாலும் பேட்டிங் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நாளைய முக்கியமான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவது அவசியம்.

    கேப்டன் டோனி ஒருவர் மட்டும் நிலையாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் 10 இன்னிங்சில் 405 ரன் குவித்துள்ளார். 7 முறை அவுட் ஆகாததால் அவரது சராசரி 135.00 ஆகும். அதிகப்பட்சமாக 84 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 138.69 ஆகும். 21 பவுண்டரியும், 23 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    டோனிக்கு அடுத்தபடியாக ரெய்னா 364 ரன்னும், டுபெலிசிஸ் 320 ரன்னும், அம்பதி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர்.

    வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே அதிரடியாக விளையாடினார். ஆனாலும் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

    சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் (23 விக்கெட்), ஹர்பஜன்சிங் (14), ஜடேஜா (13) ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் சேர்ந்து 50 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    சேப்பாக்கம் ஆடுகளத்தில் தான் டோனி 3 சுழற்பந்து வீரரை பயன்படுத்துவார். விசாகப்பட்டினம் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வீரர்களை முடிவு செய்வார். ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீரர் ஒருவர் இடம் பெறலாம். ‌ஷர்துல் தாகூர் அல்லது வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    டெல்லி அணி ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடி இருப்பதால் ஆடுகளத்தை நன்றாக கணித்து இருக்கும். இதனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு அந்த அணியை வீழ்த்துவது சவாலானதே.

    டெல்லி அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது. தவான் (503 ரன்), ஷிரேயாஸ் அய்யர் (450), ரி‌ஷப் பந்த் (450), பிரித்விஷா (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இது தவிர இங்ராம், ருதர்போர்டு, கீமோபவுல் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் 25 விக்கெட் வீர்த்திய ரபடா இல்லாதது பாதிப்பே. இதை சரி செய்யும் வகையில் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் சர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10) ஆகியோர் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.

    இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ‘குவாலிபையர்2’ ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #IPL2019 #CSKvsDC
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் உ.பி. அணியை 38 -31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை இன்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 38 - 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha 
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. சகா, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. கலீல் அஹமது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சுனில் நரைன், 2. கிறிஸ் லின், 3. ராபின் உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. அந்த்ரே ரஸல், 8. பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. ஷிவம் மவி.
    ×