என் மலர்
நீங்கள் தேடியது "Preity Zinta"
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
- இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம்ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வி அதன் இணை உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தாவை நிலைகுலைய வைத்திருக்கிறது. தனது அணி வெறும் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்தே பிரீத்தி ஜிந்தாவை கவலை தொற்றிக்கொண்டது.
புன்னகையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அவரின் முகம் மாறியது. அரங்கில் அமர்ந்திருந்த அவர் அதன்பின் சோகத்துடனேயே காணப்பட்டார்.
ஏமாற்றத்தாலும், வருத்தத்தாலும் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் மற்றும் இறுதியில் தோல்வி உறுதியானதும் அவர் காணப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் சோகமடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். குறிப்பாக முந்திய பஞ்சாப் வெற்றியின்போது அவர் துள்ளிக்குதித்த வீடியாவுடன் இதை பலரும் ஒப்பிட்டு வருகின்றனர்.
- கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளர் ஆவார். இந்த அணியின் உரிமையை வைத்திருக்கும் கேபிஹெச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இணை இயக்குநர் பதவியை பிரீத்தி ஜிந்தா வகிக்கிறார்.
இந்நிலையில் நிறுவனத்தின் இணை இயக்குநர்களான மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக சண்டிகர் நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நிறுவனம் சார்பில் ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், இந்தக் கூட்டத்தை நடத்துவதில் 'நிறுவனங்கள் சட்டம், 2013' மற்றும் பிற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று பிரீத்தி ஜிந்தா தனது மனுவில் குற்றம் சாட்டினார்.
இந்த கூட்டம் குறித்து ஏப்ரல் 10 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், தான் எழுப்பிய ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதாக பிரீத்தி ஜிந்தா கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்த கூட்டத்தில் பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார். முனிஷ் கன்னாவின் நியமனத்தை இருவரும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியாவின் ஆதரவுடன் கூட்டம் தொடர்ந்ததாகவும், கன்னாவின் நியமனம் இறுதி செய்யப்பட்டதாகவும் பிரீத்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தையும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ரத்து செய்யுமாறு பிரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தை நாடியுள்ளார். முனிஷ் கன்னா இயக்குநராக செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் ஐபிஎல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
- மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியேறியது.
- புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் 92 மீட்டர் தூரத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பஞ்சாப் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
- அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
போட்டி முடிந்த பின்பு அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டத்தை பஞ்சாப் அணியின் இணை நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா Recreate செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
- கடினமாக இலக்கை அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது காவ்யா வாடிய முகத்துடனும் ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
கடினமாக இலக்கை அதிரடியாக ஆடி அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாகவும் ப்ரீத்தி ஜிந்தா சோகமாகவும் காணப்பட்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
- அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அவருக்கும் என் பாராட்டும் மரியாதையும் உண்டு என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது. இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள். ஆனால் ஷஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்.
தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே ஷஷாங்க் போல் உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.
- பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
- ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி புள்ளி பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால், அந்த அணியின் தற்காலிக கேப்டனாக சாம் கர்ரன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து அந்த அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா பேட்டியளித்தார்.
பேட்டியின் போது பேசிய அவர் பஞ்சாப் அணியில் தற்போது நிலைத்தன்மை மற்றும் சாம்பியன் மனநிலை கொண்ட ஒருவர் இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரோகித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கு என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன். எங்களது அணியில் நிலைத்தன்மை, சாம்பியன் மனநிலையை கொண்டுவரும் ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர்.
- நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.
இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு
- யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம்
பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இந்நிலையில், பிரீத்தி ஜிந்தா தனது ரூ.18 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா காங்கிரசின் குற்றச்சாட்டை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.
இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "எனது சமூக ஊடக கணக்குகளை நான் தான் பயன்படுத்தி வருகிறான். அடிப்படையே இல்லாத பொய் தகவல்களை பரப்புவதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சி என்னுடைய பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்புவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிட்டுள்ள கடனை நான் திருப்பி செலுத்தி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரீத்தி ஜிந்தா மறுப்பு செய்திக்கு விளக்கம் கேட்டு கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "பிரபலங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை ஐடி பிரிவிடம் ஒப்படைத்து நிர்வகிப்பதை போல் அல்லாமல் உங்கள் சமூக ஊடக கணக்குகளை நீங்களே நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் கடன் நிலை குறித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை தான் நாங்கள் பகிர்ந்தோம்.
ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ரிசர்வ் வங்கியில் நடக்கும் ஊழல்கள் குறித்து நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர்கள், 2020 ஜனவரியில் கடிதம் எழுதி எச்சரித்தனர். அந்த கடிதத்தில் உங்கள் பெயருடன் மேலும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் சேமிப்பை இழந்த பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். இந்த தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்துடன் சேமிப்பை இழந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.
லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.

ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.
நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.






