என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PBKSvsLSG"

    • இப்போட்டியில் ரிஷப் பண்ட் 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    தொடர்ந்து பார்ம் அவுட்டில் தவித்து வரும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், இப்போட்டியிலும் 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். குறிப்பாக ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

    அஸ்மத்துல்லா உமர்சாய் ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்ற பண்டின் பேட் அவர் கையை விட்டு நழுவி ஸ்கொயர் லெக் சைடில் பறந்தது. அதே சமயம் பேட்டில் பட்டு இடது பக்கம் பிறந்த பந்தை ஷஷாங்க் சிங் கேட்ச் பிடித்தார்.

    இதனையடுத்து, கடந்த சீசன்களில் பந்தை பறக்கவிட்டு பண்ட் இப்போது பேட்டை பறக்கவிட்டு அவுட்டாகி வருகிறார் என்று  நெட்டிசன்கள் அவரை இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு (27 கோடி ரூபாய் ) ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் தான் குறிப்பிடத்தக்கது. 

    • மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியேறியது.
    • புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    இப்போட்டியில் மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் 92 மீட்டர் தூரத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பஞ்சாப் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

    தரம்சாலா:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.

    லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களை விளாசினர். அடுத்து இறங்கிய லக்னோ 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:

    பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அடுத்த 3 போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.

    236 ரன்கள் என்பது துரத்துவதற்கு மிக அதிகம். பீல்டிங்கும் சரியாக இல்லை. நிச்சயமாக அதிக ரன்கள். தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டால், அது உங்களை மோசமாக பாதிக்கும். அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

    நாங்கள் தொடக்கத்தில் சரியான நீளத்தை தேர்வு செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் வெளியே வருவார்கள் என நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது

    6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
    • 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 237 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
    • 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.

    முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது.

    இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.

    மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசினர்.
    • ஹாட்ரிக் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரன் 45 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தது.

    கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், மற்ற வீரர்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 பந்துகளில் மிக விரைவாக அரை சதம் அடித்த கைல் மேயர்ஸ் மொத்தம் 54 ரன்கள் குவித்தார். ஆயுஸ் பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர்.

    ஹாட்ரிக் பவுண்டரியுடன் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தீபக் ஹூடா 11 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பஞ்சாப் தரப்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    • லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை குவித்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மொகாலி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து, 54 ரன்கள் சேர்த்தார். நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்களும், ஆயுஷ் பதோனி 43 ரன்களும் எடுத்தனர்.

    பஞ்சாப் சார்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் அவுட்டானார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ரசா 36 ரன்னும், லிவிங்ஸ்டோன் 23 ரன்னும், சாம் கர்ரன் 21 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா டெய்ட் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×