என் மலர்
நீங்கள் தேடியது "Lucknow team owner"
- பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
- 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.
மலைவாசஸ்தலமான இமாசலபிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்த சீசனில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
- தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம்.
- உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.
சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வியடைந்ததன் மூலம் லக்னோ அணி 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் எனவும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இருமுறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இது போதாது.
தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம். உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.






