என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    குவாலிபையர் 2: பஞ்சாப்புக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
    X

    குவாலிபையர் 2: பஞ்சாப்புக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

    பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    Next Story
    ×