என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சாப் கிங்ஸ் அணி"
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது
- தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது
நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது
பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.
- தொடர்ந்து 3 தோல்வியை சி.எஸ்.கே. அணி சந்தித்துள்ளது.
- பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.
சென்னை:
10 அணிகள் பங்கேற் றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22- ந் தேதி தொடங்கியது.நேற்றுடன் 19 லீக் ஆட்டங் கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
2-வது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது. கவுகாத்தியில் விளையாடிய 3-வது போட்டியில் 6 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் 25 ரன்னில் வீழ்ந்தது. சி.எஸ். கே. 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்சை நாளை (செவ்வாய்க்கிழமை) நியூ சண்டிகரில் (முலான்பூர்) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.
தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீளூமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் பிளேயில் ரன் குவிப்பது மிகவும் அவசியமாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப இயலும்.
பஞ்சாப் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் முறையே குஜராத் ( 11 ரன்), லக்னோவை (8 விக்கெட்) வீழ்த்தியது. 3- வது போட்டியில் ராஜஸ்தானிடம் 50 ரன்னில் மோசமாக தோற்றது.
அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்
- ஆஸ்திரேலியாவின் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.
இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.
பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும்.
15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.






