என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BBL"

    • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    சென்னை:

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

    அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.

    இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.

    இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

    • ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
    • இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.

    ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.

    பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
    • 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    லாகூர்:

    பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.

    இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பிக்பாஷ் தொடரில் சிட்னி சிக்சர் அணிக்காக டாம் கரண் விளையாடி வருகிறார்.
    • பிக்பாஷ் தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.

    போட்டிக்கு முன் பவுலிங் ரன் அப்பிற்காக டாம் கரண் அளவு மேற்கொண்டார். அப்போது ரன் அப் செய்ய முயன்றார். இதனை பார்த்த நடுவர் ஆடுகளத்தின் அந்தப் பகுதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், மற்றொரு பயிற்சி ரன்-அப்பிற்காக கரண் எதிர் முனைக்குச் சென்றார்.

    ஆடுகளத்தை நோக்கி ரன் அப் செய்த தயாராக இருந்த டாம் கரணை தடுப்பதற்காக ஸ்டம்புகளுக்கு அருகில் நடுவர் நின்றார். இதை பார்த்த கரண் நடுவரை விலகிச் செல்லும்படி சைகை செய்தார். அதற்கு நடுவர் இதில் பயிற்சி செய்ய கூடாது. அதற்கு பக்கத்தில் செய்யுமாறு கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கரன், அவரை நோக்கி ரன் அப் செய்து அவர் மீது மோதுவது போல ஓடி வந்து தள்ளி சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா நடத்தை விதிகளின் கீழ் "நிலை 3" குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் நேற்று 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை அறிவிப்பு வெளியானது.

    இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்ப்கள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
    • பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்ப்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    நவீன யுகத்தில் கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பை மறுபரிசலனை செய்யக்கூடிய டிஆர்எஸ் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் ஸ்னிக்கோ மீட்டர் முதல் லேட்டஸ்ட்டாக ஐசிசி அறிமுகப்படுத்திய டைமர் வரை கிரிக்கெட்டில் முடிவுகளை துல்லியமாக வழங்குவதற்காக தற்போது ஏராளமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் தற்போது எலக்ட்ரா ஸ்டெம்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பேஷ் தொடரில் ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்புகள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. ரசிகர்களை கவர்வதற்காகவும் பந்து ஸ்டெம்பு மீது படுவதை நன்றாக அறிவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அது நல்ல வரவேற்பை பெற்றதால் ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2014 முதல் தற்போது அனைத்து வகையான போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 வெவ்வேறு நிகழ்வுகளின் போது 5 வெவ்வேறு வகையான மின் விளக்குகள் எரிந்து சிக்னல் கொடுக்கும்.

    முதலாவதாக இந்த ஸ்டம்பில் பந்து படும் போது சிவப்பு மற்றும் நெருப்பு நிறத்திலான வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். 2-வதாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போது இந்த ஸ்டெம்புகள் பச்சை, ஊதா போன்ற பல்வேறு நிறங்களில் வண்ண வண்ணமாக மாறி மாறி எரிந்து சிக்னல் கொடுக்கும். 3-வதாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் போது இந்த ஸ்டெம்ப்களில் அதே போன்ற வண்ணங்கள் மேலும் கீழுமாக சென்று சிக்னல் கொடுக்கும்.

    அதை விட 4-வதாக பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து நோபால் வீசும் போது இந்த ஸ்டெம்புகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மேலும் கீழுமாக சென்று உடனடியாக சிக்னல் கொடுக்கும். பந்து வீச்சாளர்கள் நோபால் வீசுவதை கண்டறிய இந்த ஸ்டெம்ப்புகள் சென்சார்களை பயன்படுத்தி நோ-பால் வீசுவதை கண்டறிந்து உடனடியாக மின்விளக்குகளால் எரிவதுடன் மைதான ஒலிபெருக்கியில் சிக்னலையும் ஏற்படுத்தும்.

    அதனால் அம்பயர்களை விட துல்லியமாக செயல்படக்கூடிய இந்த ஸ்டெம்புகள் ஓவர்களுக்கு இடையே ஊதா, நீல வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். அப்படி 5 சிறப்புகளைக் கொண்டுள்ள இந்த ஸ்டெம்புகள் மைதானத்தில் தூரத்தில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களை கவர்வதற்காகவும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

    பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

    முன்னதாக இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு சிறப்பான கேட்ச் பிடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த வகையில் 16 ஓவரை லாரன்ஸ் வீசினார். அவர் வீசிய முதல் பந்தையே வில் சிக்சர் அடிக்க முயற்சித்தார். அப்போது லாங் ஆனில் இருந்த மேக்ஸ்வெல் அவர் அடித்த பந்தை சாமர்த்தியமாக பிடித்தார்.

    கிட்டத்தட்ட அந்த பந்து பவுண்டரி கோட்டை கடந்தது. அந்த பந்தை மேக்ஸ்வெல் பிடித்து மேலே தூக்கி போட்டு மீண்டும் எல்லை கோட்டுக்கு வந்து கேட்ச் பிடித்து அசத்தினார். அவரது கேட்சை சக வீரர்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
    • பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

    பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.

    இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

    இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 114 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த நாக் அவுட் சுற்று போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மின்னல் காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. ஆலிவர் டேவிஸ் 36 ரன்னும், மேத்யூ கைக்ஸ் 28 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி சேலஞ்சர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

    • முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    • முதலில் ஆடிய சிட்டகாங் அணி 20 ஓவரில் 194 ரன்கள் குவித்தது.
    • பர்வேஸ் ஹொசைன், கவாஜா நபே அரை சதம் அடித்தனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பார்ச்சுன் பாரிஷல், சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ச்சுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்டகாங் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.

    பர்வேஸ் ஹொசைன் 78 ரன்னும், கவாஜா நபே 66 ரன்னும், கிரஹாம் கிளர்க் 44 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ச்சுன் அணி களமிறங்கியது. கேப்டன் தமிம் இக்பால் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 46 ரன்னும், ஹ்ருடோய் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், பார்ச்சுன் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் பார்ச்சுன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.

    ×